districts

வேலை வாங்கித் தருவதாக ரூ.3.78 லட்சம் மோசடி

திருச்சிராப்பள்ளி, மார்ச் 24- திருச்சிராப்பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.78 லட்சம் மோசடி செய்துள்ளனர். காவல்துறை தகவலபடி, 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை இந்த மோசடி நடந்துள்ளது.  திருச்சிராப்பள்ளி குறிஞ்சி நகரைச் சேர்ந்த  ஏ.விஜயராணி (63), என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் அணுகி, தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக உறுதி யளித்து, அவரது மொபைலுக்கு மூன்று வெவ் வேறு எண்களில் குறுஞ்செய்தி அனுப்பினர். அவர் தனது வங்கி விவரங்களை அவர்களு டன் பகிர்ந்து கொண்டார். அவரது ஏடிஎம் கார்டு விவரங்களை அறிந்தவுடன், அவரிடமிருந்து ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற்று அவரது  வங்கிக் கணக்கிலிருந்து ரூ.3.78 லட்சத்தை எடுத்துள்ளனர். தேசிய சைபர் கிரைம் இணைய தளத்தில் அவர் புகார் அளித்தார். இந்தப்  புகார் திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல் துறைக்கு அனுப்பப்பட்டது. சைபர் கிரைம் காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.