districts

img

ஏழைகளுக்கு புளுத்துப் போன அரிசி வழங்குவதை கண்டித்து போராட்டம்

மயிலாடுதுறை,  ஜன.24 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி அருகே யுள்ள எடுத்துக்கட்டி சாத்த னூர் ரேசன் கடை முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் கிளை செயலாளர் செல்லப்பா  தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. ரேசன் கடைகளில் வழங் கப்படுகிற அரிசியையே நம்பியுள்ள ஏழை, எளிய  மக்களை அலட்சியப்படுத் தும் விதமாக, தரமான அரிசி  வழங்காமல் தொடர்ந்து புளுத்துப் போன அரிசிகளை ரேசன் கடைகளுக்கு விநி யோகம் செய்கிற தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் கண்டி த்து போராட்டம் நடைபெற் றது. போராட்டத்தில் கட்சியின்  மாவட்டக் குழு உறுப்பினர் காபிரியேல், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பவுல்  சத்தியராஜ், விவசாய தொழி லாளர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் அய்யாசாமி, விவசாய சங்க ஒன்றிய க்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.