திருப்பூர், ஜூலை 1 - ஒன்றிய அரசு குற்றவியல் சட்டத் திருத்தங்களை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்துவதை கைவிட வேண்டும், நாடாளுமன்றத்தில் இது குறித்து மறு விவாதம் நடத்தி முடிவு காண வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய குற்றவியல் சட்டங்களை முந்தைய மோடி அரசு தன்னிச்சையாக திருத்தம் செய்ததுடன், அந்த சட்டங்களை பெயர் மாற்றமும் செய்தது. இந்த சட்டத் திருத்தங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறி வித்தனர். இதைக் கண்டித்து தமிழகத்தில் பல் வேறு வழக்கறிஞர் அமைப்புகள் இணைந்து திங்களன்று நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பை அறிவித்தனர். அத்துடன் குற்றவியல் சட்டத் திருத்தங் களைக் கைவிட்டு, மறு விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட் டங்கள் நடத்தவும் அறைகூவல் விடுத்த னர். அதன்படி திருப்பூரில் திங்களன்று அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் இணைந்து மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் பார் அசோசியேசன் தலை வர் கே.என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ஈ.பூபேஷ், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறி ஞர் சங்க நிர்வாகி எஸ்.ஏ.சுப்புராஜ், திருப்பூர் பார் அசோசியேஷன் செயலா ளர் பத்மநாபன், திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன் செயலாளர் ஆ. அமர்நாத், மூத்த வழக்கறிஞர்கள் வை. ஆனந்தன், ஈ.என்.கந்தசாமி உள்பட திர ளானோர் கலந்து கொண்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி னர். இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மூன்று வழக்கறிஞர் சங்கங் களின் கூட்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் குற்றவியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்ப டுத்துவதை கைவிட வலியுறுத்தி ஜூலை 8ஆம் தேதி வரை நீதிமன்றப் பணிக ளைப் புறக்கணிப்பது என்று ஒரும னதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.