மயிலாடுதுறை, பிப்.23 - அனைத்து வட்டங்களிலும் துணை வட்டாட்சியர் பணியிடங்கள் ஏற்படுத்தி நியமிக்க வேண்டும். 2024 நாடாளு மன்ற தேர்தல் பணிகள் தொய்வில்லா மல் நடைபெற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தி னர் தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வட்டத் தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். வட்டச் செயலா ளர் மரிய ஜோசப் ராஜ் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் இளவரசன், பொருளாளர் முருகேசன், மத்திய செயற் குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட இணைச் செயலாளர் பாபு ஆகியோர் உரையாற்றினர். இதேபோன்று மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் வட்டாட்சியர் அலுவ லகங்களிலும் போராட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் நடந்த போராட்டத்திற்கு வட்டக் கிளைத் தலைவர் பொப்பனா மலை தலைமை வகித்தார். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு 2 ஆவது நாளாக நடை பெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் செ.பிரகாஷ், தலைவர் எஸ்.செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.