districts

திருச்சி முக்கிய செய்திகள்

லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பணியேற்பு 

தஞ்சாவூர்,  ஜூலை 22-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பணி யேற்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலை வர் சிவநாதன் தலைமை  வகித்தார். மாவட்ட இரண்டாம் துணைநிலை ஆளுநர் விஜயலட்சுமி, 2024-25 ஆம் ஆண்டிற் கான புதிய நிர்வாகி களை பணியில் அமர்த்தி யும், சேவைத் திட்டங் களை துவக்கி வைத்தும் பேசினார்.  முன்னாள் ஆளுநர் சண்முகவேல் புதிய உறுப்பினர்களை சங்கத் தில் இணைத்து வைத்துப் பேசினார். மாவட்ட அவை இணைப் பொரு ளாளர் ராஜா, மாவட்ட தலைவர்கள் ராஜேந்தி ரன், ராமமூர்த்தி, மண்ட லத் தலைவர் சவுரி, வட்டாரத் தலைவர் சிவ நாதன் மற்றும் நிர்வாகி கள் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் புதிய தலைவராக துரையரசன், செயலாளராக ராஜேந்தி ரன், பொருளாளராக இளையராஜா பொறுப் பேற்றுக் கொண்டனர். இதில், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டன. 

மாணவர்கள் அறிமுக விழா

பாபநாசம், ஜூலை 22 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி  கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் முதலா மாண்டு மாணவர்களின் அறிமுக விழா நடந்தது. முன்னதாக கல்லூரி துணை முதல்வர் தங்க மலர் வரவேற்றார். கல்வி  நிறுவனங்களின் தலை வர் தாவூது பாட்சா தலைமை வகித்தார். நிர்வாக துணைத் தலை வர் டாக்டர் சையது ஹுசைன், டிரஸ்டி டாக்டர்  அப்ரோஸ் சுல்தானா ஆகியோர் பேசினர்.  மீனாட்சி மருத்துவ மனை சார்பில் மாண வர்களுக்கு அடிப்படை உடல் பரிசோதனை நடந்தது. கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளர் அப்துர் ரஹ்மான் நன்றி கூறினார்.

முன்னாள் மாணவர்கள் கவுரவிப்பு

அறந்தாங்கி, ஜூலை 22 -   புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அரசி னர் பல்வகை தொழில் நுட்ப கல்லூரி சார்பாக  அனைத்துத் துறை முன்னாள் மாணவ, மாணவிகளை கவுரவப் படுத்தும் விழா ஞாயி றன்று கல்லூரி வளாகத் தில் நடைபெற்றது.  விழாவிற்கு கல்லூரி முதல்வர் ச.குமார் தலைமை வகித்தார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை விரி வுரையாளர் செந்தில் குமார் வரவேற்றார். கல்லூரியில் திறன் மிகு  வகுப்பறைகள் அமைய  நிதி உதவி அளித்த 150  முன்னாள் மாணவ, மாண விகள், தங்களது நினைவு களை பகிர்ந்தனர். பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் முனைவர் வீ.ஜோதி மணி, கல்லூரி முதல்வர் ச.குமார் ஆகியோர் முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு நினைவு கேடயம் வழங்கி கவுர வப்படுத்தினர். பின்பு, கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.  கணினியில் துறை விரிவுரையாளர் அபிராமி  நன்றி கூறினார்.

மீன் மார்க்கெட்டிற்கு டெண்டர் விட எதிர்ப்பு திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 22 - திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப் பட்டு விற்பனை செய்யப்படுகின்றன; ஏற்றுமதியும் செய்யப் படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன. காந்தி மார்க்கெட்டை ஒட்டி மீன் மார்க்கெட், கறிக்கடை  மார்க்கெட் உள்ளது. இந்த பழைய மார்க்கெட் அகற்றப் பட்டு ரூ. 13 கோடியில், 148 கடைகள் மீன் மார்க்கெட்டிற்காக  கட்டப்பட்டன. இதில், கீழ் தளத்தில் 74 கடைகளும், மேல்  தளத்தில் 74 கடைகளும் கட்டப்பட்டன. இந்த கடைகள் பழைய வியாபாரிகளுக்கு மீண்டும் வழங்கப்படும் என அதி காரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர் பாக நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கையும் வியாபாரி கள் வாபஸ் பெற்றனர்.  இந்நிலையில் பழைய வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்படாது. நீங்கள் அனைவரும் டெண்டரில் கலந்து  கொண்டு கடைகளை ஏலம் எடுக்க வேண்டும் என அறி விக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த மீன் மார்க்கெட்டுக் கான டெண்டர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) அன்று  நடக்கிறது.  இதை கண்டித்து திருச்சி காந்தி மார்க்கெட் மீன் கடை, கறிக்கடை வியாபாரிகள் தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை மாவட்டத் தலைவர் எஸ்.பி. பாபு தலைமை யில் திங்களன்று மார்க்கெட்டில் ஒன்று திரண்டனர். அவர்கள் எங்களுக்கு கடைகளை ஒதுக்கி தரவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து,  அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆடி 18-க்கு முன்பே மேட்டூர் அணை திறக்கப்படுமா?

பாபநாசம், ஜூலை 22 - ஆடி 18-க்கு முன்பே மேட்டூர் அணையை திறக்க வேண்டுமென பாபநாசம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து கணபதி அக்ரஹாரம் முன்னோடி விவசாயி சீனிவாசன் கூறுகையில், கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீர் மிக அதிக அளவில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இன்றைய சூழ்நிலையில் மேட்டூர் அணை நீர் இருப்பு 30 டி.எம்.சி ஆக உள்ளது. மேட்டூர் அணை நிரம்ப 63 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கும் கர்நாடக அணைக்கும் இடையில் வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு 10 டி.எம்.சிக்கு அதிகமாக உள்ளது. இதே நிலை நீடித்தால் ஒரு வாரத்தில் மேட்டூர் அணை நிரம்ப அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்னும் ஓரிரு நாளில் கர்நாடகா அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விட வாய்ப்புகள் உள்ளன. இந்திய வானிலை மையம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 10 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளது.  இந்நிலையில், கர்நாடகாவில் திறந்து விடப்படும் நீரின் அளவை துல்லியமாக கணித்து, தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் அரசுடன் கலந்தாலோசித்து, முன்கூட்டியே மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கர்நாடக அரசை போல், கடைசி வரை தேக்கி வைத்துக் கொண்டு, பிறகு கொள்ளிடத்திற்கு தண்ணீரை திறந்து விடும் சூழ்நிலை உருவாகும். 5 முதல் பத்து 10 டிஎம்சி வரை கடலில் கலக்கும் நிலையும் ஏற்படும். எனவே, ஆடி 18-க்கு முன்பே மேட்டூர் அணையை திறக்க ஆயத்தப் பணிகள் செய்து தயார் நிலையில் இருக்குமாறு விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்றார். பட்டுக்குடி முன்னோடி விவசாயி ஜெய்சங்கரும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

காதலி தூக்கிட்டு இறந்த துக்கத்தில்  விஷம் அருந்திய காதலன் பலி

புதுக்கோட்டை, ஜூலை 22 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் புவனேஸ்வரி (23). இவருக்கும் நெம்ம கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அருள் வினோத் (28) என்பவருக்கும் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரி வெள்ளிக் கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து  கொண்டுள்ளார். அங்கு சென்று வந்த அருள் வினோத், வெள்ளிக்கிழமை இரவு தான் பணிபுரிந்து வரும் பள்ளியின்  பின்புறமுள்ள வாழைத் தோட்டத்தில் பூச்சிமருந்தைக் குடித்துள்ளார். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,  சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து  வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும்

மீனவர் நலவாரிய துணைத் தலைவர் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 22 -  தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவரும், தமிழ்நாடு மீனவர்  பேரவை மாநில பொதுச் செயலாள ருமான மல்லிப்பட்டினம் ஏ.தாஜூதீன், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்  கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு  தீர்வு இல்லாமல் மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் ஒன்றிய அரசு நடந்து கொள்வது மீனவர்களை வாழ்வாதார இழப்பிற்கு ஆளாக்குகிறது.  காரணம், நமது ஒன்றிய அரசு தமிழக  மீனவர் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமலும், மீனவர்களுக்கு ஏற்ற நன்மையான திட்டங்களை நேரடியாக பெறுவதற்கு அறிவிக்காமலும் இருப்பதே. தமிழக அரசில் நிதி பற்றாக்குறை இருந்தாலும், மீனவர்களுக்கான எண்ணற்ற திட்டங்களை அறிவித்து வரு கிறது. இலங்கை கடற்படையால் பிடிக் கப்பட்ட படகுகளுக்கு, படகு ஒன்றுக்கு  ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கியது. அதுமட்டும் இல்லாமல் மீனவர்கள் பயன்படுத்தும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.16 வரை (விற்பனை வரி நீக்கம் செய் யப்பட்ட) ஆண்டு ஒன்றுக்கு விசைப் படகுகளுக்கு 19,000 லிட்டரும், நாட்டுப்  படகுகளுக்கு 45,000 லிட்டரும் வழங்கி  வருகிறது.  மேலும், மானிய விலை யில் இன்ஜின் போன்ற எண்ணற்ற திட்டங் களை வழங்கி மீனவர்களை காப்பாற்றி  வருகிறது.  மாறாக ஒன்றிய அரசு மீனவர்கள் நேரடியாக பயன்படுத்தும் அளவிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும்  ஏதுவாக திட்டங்களை போடுகிறது. இப்படி பல விதத்திலும் ஒன்றிய அர சால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டும்... இந்தியாவில் பல பகுதிகளிலும் உள்ள மீனவர்கள், பல்வேறு அண்டை  நாடுகளால் கைது செய்யப்படுவதும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஏற்பாடு செய்யும் ஒன்றிய அரசு, ஏன் தமிழக மீனவர்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தானே. ‘தமிழக மீனவர்கள் தாங்க ளாகவே இலங்கை நாட்டு நீதிமன்றத் தில் வழக்குப் போட்டு, சுமார் 15 பட குகளை மீனவர்களிடத்தில் ஒப்படைக்க  வேண்டும்’ என அந்த நாட்டு நீதி அர சர்கள் தீர்ப்பளித்தும், நமது ஒன்றிய அரசின் உத்தரவு கிடைக்காததால், படகுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முடியாமல் இலங்கையிலே இருக் கின்றன. இப்படி பல வகைகளிலும் ஒன்றிய  அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை போக்கை கைவிட்டு, எல்லாரும் இந்திய  மீனவர்களே என்ற மனப்பான்மையுடன் தமிழக அரசு போல், ஒன்றிய அரசும் மீனவர்களுக்கு சலுகைகள் வழங்கி உதவிட பாரத பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்வதுடன், மேற்கண்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். தமிழக மீனவர்களுக்கு ஒன்றிய அரசு தீர்வு காணாத பட்சத்தில் தமிழகம்  தழுவிய அனைத்து மீனவர்களையும் ஒருங்கிணைத்து, மீனவர்களுக்கு ஆத ரவு தரக்கூடிய அனைத்து கட்சிகளை யும் ஆலோசித்து மிகப்பெரிய போராட் டத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக முன்னெடுப்பது என அனைத்து மீனவர் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.