districts

img

மழை-வெள்ளத்திற்கும்... கூந்தலூர்-வடமட்டம் சாலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை “ஏழு ஆண்டுகளாக குண்டும்-குழியுமாக உள்ளது”

குடவாசல், நவ.17- மயிலாடுதுறை மாவட்டம் குட வாசலை அடுத்துள்ள  கூந்தலூர் - வட மட்டம் இணைப்புச் சாலை  ஏழுவருடங்க ளாக குண்டும் குழியுமாகத் தான் உள்ளது. இந்தச் சாலை சற்குணஸ்வரம், பரவக்  கரை, வயலூர், கூந்தலூர் ஊராட்சி கிரா மத்திற்குட்பட்ட  கருவேலி,கடலங்குடி, அம்  மாச்சிபுரம்,கீழ வயலூர் உள்ளிட்ட ஆறு கிராமங்களின் இணைப்புச் சாலையாக  உள்ளது. இந்த மோசமான சாலையில் தான் மக்கள் சென்றுவருகின்றனர். சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் பெரும் பள்ளங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில்  போடப்பட்ட இந்தச் சாலை தற்போது பிர தமர் சாலை மேம்பாட்டு திட்டத்தில்  சீர மைக்க ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள் ளது. இருப்பினும்  தற்போது வரை  சாலை யை சீர் செய்யும் பணிகள் தொடங்க வில்லை. உடனடியாக புதிய தார் சாலை  அமைக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடவாசல் வடக்கு பகுதிச்  செயலாளர் கே.ரவிச்சந்திரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.