புதுக்கோட்டை, ஜூலை 24-
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான மகளிருக்கான செஸ் போட்டி புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் திங் கள்கிழமை நடைபெற்றது.
போட்டியினை சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா தொடங்கி வைத்தார். ஓப்பன் பிரிவில், முதல் மூன்று இடங்களில் நவசக்தி, ஜோதிகா, தாட்சா யிணி ஐயப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 15 வய துக்கு உட்பட்டவர் களுக்கான பிரிவில் ஆஷினி வந்தனா, கீர்த்தனா, அடே லின் ஜெனிதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
12 வய துக்குட்பட்ட பிரிவில் ஸ்ரீநிதி செல்லப்பா, எஸ்.தர்ஷினி, எஸ்.சிவசங்கரி ஆகியோர் வெற்றி பெற்றனர். 9 வய துக்குட்பட்ட பிரிவில் எஸ். யாழினி, விகாஷினி, மகிழினி ஆகியோர் வெற்றி பெற்ற னர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட செஸ் சங்கத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு அலுவலர் மன்ற நிர்வாகி டாக்டர் ராமசாமி தலைமை வகித்தார்.