districts

img

ஐ.வி.நாகராஜன் எழுதிய நூல் வெளியீடு

குடவாசல், ஜன.20-  திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியம், பேரளம்-திரு மீயச்சூர் தியாகிகள் நினை விடத்தில் தியாகி ஜெ.நாவலன் 11 ஆம் ஆண்டு வீரவணக்கம்-நினைவு தின கூட்டம் ஜனவரி 19  அன்று நடைபெற்றது. அப்போது, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் எழுதிய தோழர் என்.சங்க ரய்யா 100, வாழ நினைத்தால் வாழலாம், சிசு கொலையும், கருக்கொலையும் என்று புத்த கங்கள் வெளியிடப்பட்டன. முதல் நூல்களை கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் வெளியிட வாலிபர் சங்க செய லாளர் கே.பி.ஜோதிபாசு, மாண வர் சங்க மாவட்டத் தலைவர் ஆனந்த், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.தமிழ்செல்வி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.  மேலும் நன்னிலம் ஒன்றியம் சார்பாக கட்சி நிதியாக, முதல் கட்டமாக கட்சி ஆதரவாளர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், பொதுமக்கள் வழங்கிய ரூ.50 ஆயிரம் நிதியை சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம், நகர செயலாளர் சீனி.ராஜேந்திரன் ஆகியோர் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை யிடம் வழங்கினர்.