தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (48). இவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கால்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் இவரது வேண்டுகோளை ஏற்று, ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.7,900 மதிப்பிலான சைக்கிள் வழங்கப்பட்டது. இதனை ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், செயலாளர் செந்தில், பொருளாளர் வீரராகவன் ஆகியோர் வழங்கினர்.