திருச்சிராப்பள்ளி, அக்.14 - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என போராட்டம் நடைபெற்றது. திருச்சி தாராநல்லூர் கல்மந்தை பகுதி யில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 192 அடுக்குமாடி குடியி ருப்புகள் கட்டப்பட்டன. இதனை பயனாளி களுக்கு வழங்குவதில் கடந்த ஐந்து ஆண்டு களுக்கும் மேலாக காலதாமதம் செய்வதை கைவிட்டு உடனே வழங்க வேண்டும். 5 ஆண்டுகளாக வீடு ஒதுக்கப்படாமல் உள்ள 6 பயனாளிகளுக்கு உடனே வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் தூர்ந்து போன குடிநீருக்கான ஆழ்துளை கிணற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் கல்மந்தை காலனி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்களன்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்மந்தை காலனி கிளைச் செயலா ளர் மகாலிங்கம், சங்கீதா ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன், லெனின் ஆகியோர் பேசினர். பின்னர், அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அக்.18 அன்று தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைக்கு தீர்வு காண்பது என முடிவானது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.