districts

பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றவருக்கு 4 ஆண்டு சிறை

புதுக்கோட்டை, ஜூன் 15-  

     பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற  வழக்கில் எழுத்தருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை  விதித்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி யில் பதிவு எழுத்தாளராக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து  (52). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜகோபாலபுரத்தை சேர்ந்த முத்துச்செல்லப்பன் என்பவரிடம் மாற்றுச்சான்றி தழ் நகல் வழங்க ரூ.1000 லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது  அந்தப்பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

    இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசா ரணையின் முடிவில் நீதிபதி டி.ஜெயகுமாரி ஜெமிரத்னா, குற்றவாளி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்  டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வியா ழக்கிழமை தீர்ப்பளித்தார்.