தஞ்சாவூர், ஆக.12 -
தமிழ்நாடு அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் பெறாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர், உதவியாளர்கள், ஊர்ப்புற நூல கர்கள், கிராம உதவியாளர்கள், பட்டு வளர்ச்சி துறை தினக்கூலிகள், ஊர் காவலர்கள் ஆகியோருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சனிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டத் தலைவர் கணே.மாரிமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம உதவியாளர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் அ.க.தங்கராசு துவக்க உரையாற்றி னார். ஓய்வூதிய சங்க மாவட்ட இணை செயலாளர் பிச்சைமுத்து கோரிக்கை விளக்க உரையாற்றி னார்.
திருவாரூர்
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் எஸ்.புஸ்பநாதன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ஏ.சண்முகம் துவக்கவுரையாற்றி னார். மாவட்ட இணைச் செயலாளர் பி.புவனேஸ்வரி கோரிக்கையை விளக்கி பேசினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் எம்.சௌந்தர்ரா ஜன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி வட்டச் செயலா ளர் என்.ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் எம்.முத்தையா மற்றும் நிர்வாகிகள் பேசினர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டத் தலைநகரங்களி லும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். வட்டச் செய லாளர் குணசேகரன் கோரிக்கை களை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெயபாலன் சிறப்பு ரையாற்றினார்.