districts

img

பருத்திசேரியில் சாலை வசதி கோரி போராட்டம் நடத்திய சிபிஎம் கட்சியினர் கைது

கும்பகோணம்,அக்.03 தஞ்சை மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருவிடைமரு தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்திச் சேரி கிராமத்தில் சேதமடைந்து  மண் சலையாக உள்ளது. இதை தார்சாலையாக மாற்றித் தர வலியுறுத்தி அதிகா ரிகளை சந்தித்து சிபிஎம்  கட்சியி னர் பலமுறை முறையிட்டனர் ஆனால் அதிகாரிகள் முறை யாக அப்பணியை மேற்கொள்ளாத தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனி வேல் தலைமையில்  கிராமமக்கள் சாலையில் வியாழனன்று வாழை மரக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்  அப்போது காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து திரு மண மண்டபத்தில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து திரு விடைமருதூர் ஒன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப் போது வருகின்ற கணக்கு ஆண்டில் அரசிடம் நிதி பெறப்பட்டு சம்பந் தப்பட்ட பருத்திச்சேரி கிராமத்தில் சாலைகள் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை நிறைவேற்ற வில்லை யெனில் மீண்டும் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர். போராட்டத்தில்  விவசாய தொ ழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட செய லாளர் வாசு,  ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், பருத்திசேரி சிபிஎம் கிளை செயலாளர் மணி, ஜோசப் ,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முருகன் வாலிபர் சங்க பொறுப்பாளர் பிரேமநாத் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.