districts

img

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2 நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்

திருவாரூர்,ஆக. 22-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் திரு வாரூர் மாவட்டத்தில்  மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் மற்றும் 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்  2 நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி திருவாரூர், நன்னிலம் ,குட வாசல், கொடராச்சேரி ,வலங்கை மான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டை ஆகிய 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகங்களில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் உட்பட பணி புரியும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்  2 நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட் டம் நடத்தினர்.      வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணி யிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுநீக்கம் உள்ளிட்ட அனை த்து வீடு கட்டும் திட்டங்களும் செயல்படுத்த உரிய பணியிடங்க ளை ஏற்படுத்த வேண்டும், வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது திணிக்கப் படும்  பிற துறை பணிகளை முற்றிலு மாக கைவிட்டு பணி நெருக்கடியை தவிர்க்க வேண்டும் , 17 பி குற்றச் சாட்டு குறிப்பாணைகள் பல ஆண்டுகள் தேங்கிகிடப்பதை நீக்க வேண்டும்  உள்ளிட்ட 20 அம்ச கோ ரிக்கைகளை வலியுறுத்தி இந்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடை பெற்றது. இந்தப்  போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத் தலைவர் என். வசந்தன் தலைமையில் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில், மாவட்டப் பொருளாளர் சிவகுமார் மற்றும் மாவட்ட இணைச்செய லாளர்  அமர்நாத்,துணைத்தலைவர் மோகன் உட்பட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 917 பேர்  பங்கேற்றனர்.