districts

img

சாலையோர மரத்தை வேருடன் பிடுங்கியதைக் கண்டித்து போராட்டம்

புதுக்கோட்டை, டிச. 19:-  புதுக்கோட்டை நகரில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்றை, எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சா லைத் துறை மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் வேரு டன் பிடுங்கியதைக் கண்டி த்து, மாவட்ட பசுமைக் குழு உறுப்பினர் மரத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார். புதுக்கோட்டை மாநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாநகராட்சிப் பணியாளர் கள் கடந்த சில நாட்களாக தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தெற்கு 4-ஆம் வீதியில் புதன்கிழமை ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, ஒரு மரத்தை வேருடன் பிடுங்கினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட பசுமைக் குழு உறுப்பினர் பழனியப்பா கண்ணன்,  அந்த மரத்துடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து கண்ணன் கூறுகையில், கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு, அப்போதைய வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் வைக்கப்பட்ட மரம் அது. சாலையில் இருந்து எவ்வித இடையூறும் இன்றி 2 அடி உள்ளடங்கி இருக்கிறது. இந்த மரத்தைப் பிடுங்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படியும் அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், மாவட்ட பசுமைக் குழுவில் அனுமதி பெற வேண்டும். எதையும் செய்யாமல் 14 அடி உயரம் வளர்ந்த ஒரு மரத்தை எடுத்திருக்கிறார்கள். மாநகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இனி இதுபோல் நடக்காது என அவர் உறுதியளித்தார் என்று தெரிவித்தார்.