districts

கந்துவட்டிக்கு துணை போகிறதா காவல்துறை?

ஈத்தாமொழியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.28- அப்பாவி ஏழை பெண்களை மிரட்டி அச்சுறுத்தி அநியாய வட்டி வசூல் செய்து வரும் கந்துவட்டி கும்பல் மீது நட வடிக்கை எடுத்திட வலியுறுத்தி யும், துணை போகும்  காவல் துறையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈத்தாமொழி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈத்தாமொழி அருகில் உள்ள தெற்கு பால் கிணற்றான் விளை யைச் சேர்ந்தவர் ராதிகா (42,). இவர் இங்குள்ள வெள்ளாளர் காலனியைச் சேர்ந்த வசந்தா (52) என்பவரிடம் இருந்து அவசர தேவைக்காக 2022 நவம்பர் மாதம் ரூ.30 ஆயிரம் வட்டிக்கு கட னாக வாங்கியுள்ளார். இதற்கு வார வட்டியாக ரூ.3 ஆயிரம் வீதம் வசந்தாவும் அவரது கணவர் நாராயண பெருமாளும் மிரட்டி வசூலித்துள்ளனர். ஆனா லும் தற்போது ரூ.12 லட்சம் கடன் பாக்கி உள்ளதாகவும் வார வட்டி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கேட்டு மிரட்டுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராதிகா புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தில் (டிச.25) ஈத்தாமொழி காவல் உதவி ஆய்வாளர் பொன் கீதா விசாரணைக்கு அழைத்துள் ளார். குற்றம் சாட்டப்பட்ட வந்தாவை உட்கார வைத்து, அவர் முன்னிலையில் புகார் அளித்த ராதிகாவை மிரட்டி கை யெழுத்து பெற்றுள்ளார். இதே நபர்களின் கந்து வட்டி கொடு மைக்கு நீராவித்தட்டு கிரா மத்தைச் சேர்ந்த ஸ்ரீகலா (33), மாரிசெல்வி (30) உட்பட வேறு சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராகவும், காவல்துறை நடவடிக்கையை கண்டித்தும் புதனன்று (டிச.27) நடைபெற்ற இப்போராட் டத்திற்கு கட்சியின் இராஜாக்க மங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பி னர் சிவகோபன் உள்ளிட்டோர் பேசினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெருமாள், ரெகு பதி, ஒன்றியக்குழு உறுப்பினர் கள் குமரேசன், மிக்கேல் நாயகி, அம்பிகா, கோபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்கொலைக்கு தூண்டும் கந்துவட்டி

குமரி மாவட்டம் பூதபாண்டியைச் சேர்ந்த பெயிண்டர் மதன் (42) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். நான்கு பக்க தற்கொலை குறிப்பில் தோப்பூரை சேர்ந்த வாலிபர் உட்பட மூன்று  பேர் தன்னை மிரட்டி வந்ததாக தெரிவித்துள்ளார். கடன் வாங்கிய காசை திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஆனால் அவர்கள் தன்னை தொடர்ந்து கந்து வட்டி கேட்டு மிரட்டி வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தைபோலீசார் கைப்பற்றியபோதிலும் எவரும் கைது செய்யப்படவில்லை. இதுபோல் ‘கோழி கூவுது’. திரைப்படத்தை தயாரித்து நட்டமடைந்த நாகர்கோவில் மீனாட்சி புரம் தோப்புவணிகர் தெருவைச் சேர்ந்த ஏ.நாகராஜன் தன்னை நாகர்கோவிலைச் சேர்ந்த மீட்டர் வட்டி கும்பல் மிரட்டி வருவதாக புகார் அளித்திருந்தார். அதில், கரூரைச் சேர்ந்த ஒருவரும், நாகர்கோ விலைச் சேர்ந்த 3 பேரும் வீடு தேடி வந்து தொடர்ந்து மிரட்டுவதால் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக புகாரில் தெரிவித்திருந்தார். மீட்டர் வட்டி கும்பலிடம் இருந்து எனது குடும்பத்தை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார்.