districts

img

வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக! தையல் தொழிலாளர்கள் மனு

திருவாரூர், அக்.12 - தையல் மகளிர் கூட்டுறவு சங்க உறுப் பினர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி திருவா ரூர் மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கத்தின் சார்பாக புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ-யிடம் கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது. மனுவில், ‘கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் உயர்த்தி வழங்க வேண்டிய 5 சதவீத  கூலியை உயர்த்தி வழங்கும் அரசா ணையை அமல்படுத்த வேண்டும். அரசு  நடத்தும் இலவச பள்ளி சீருடை தைக்கும் கூட்டுறவு தையல் உறுப்பினர் களுக்கு குறைந்தபட்ச கூலியை அமல் படுத்த வேண்டும். இலவச பள்ளி சீருடை  தைக்கும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கூலியை பாக்கி இல்லாமல் வழங்கிட வேண்டும். உறுப்பினர்களின் பாஸ் புத்தகத்தில் தைக்கும் துணி விவரம், கூலி சிக்கன சேமிப்பு உள்ளிட்ட அனைத்து விபரங்க ளையும் குறிப்பிட்டு அனைத்து உறுப்பினர் களுக்கும் சமச்சீராக துணி வழங்க வேண்டும். இலவச பள்ளி சீருடை தைக்க  தேவையான பொருட்கள் மற்றும் வெட்டுக்கூலியை உறுப்பினர்களிடம் வசூல் செய்வதை தவிர்த்து, அதற்கு  கூட்டுறவு சங்கமே பொறுப்பேற்க வேண்டும். தையல் தொழிலாளர்களுக் கும் இ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட திட்டங் களை அமல்படுத்த வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது. அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.மாலதி, பொருளாளர் ஆர்.கலா,  சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன், தையல் கலை தொழிலாளர்கள் தம யந்தி, ரேவதி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.