districts

தடை செய்யப்பட்ட கடல் புழு கடத்தல்

திருப்போரூர்,ஏப்.12-  கோவளத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழி யாக கூவத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட உவர் நீர் கடல் புழுக்கள் கடத்தப் பட்டுள்ளது.திருப்போரூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்த தகவலின் அடிப்படை யில் கிழக்கு கடற்கரைச் சாலை கோவளம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே  வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது  அதில் தடை செய்யப்பட்ட உவர் நீர் கடல் புழுக்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்த கோவளம் மாதா கோயில் தெருவை சேர்ந்த வேம்புலி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி அவரது வீட்டில் சோதனை செய்தபோது குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிவப்பு உவர் நீர் கடல் புழுக்களை பறி முதல் செய்தனர். மொத்தம் சுமார் 25 கிலோ கடல் புழுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதன் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தடை செய்யப் பட்ட இந்த வகையான உவர் நீர் கடல் புழுக்கள் கடற்பகுதியை ஒட்டி உள்ள முகத்துவாரம், கழி வேலி பகுதிகளில் அதிக அள வில் காணப்படும். மேலும் இறால் வளர்க்கும் நபர்கள் இது போன்ற உவர்நீர் கடல் புழுக்களை இறாலுக்கு கொடுப்பதினால் இறாலின் எடை அதிகமாகி அதை வெளி நாட்டிற்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிப்ப தாக வனத்துறையினர் தெரி வித்தனர். தடைசெய்யப்பட்ட கடல் புழுக்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று வனத்துறை அதி காரிகள் தெரிவித்து உள்ளனர்.