districts

img

கொட்டூர், பண்டாரவாடையில் மார்க்சிஸ்ட் கட்சியில் இணையும் நிகழ்ச்சி

குடவாசல், ஜன. 2 - நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள கொட்டூர் மற்றும் பண்டாரவாடை ஊராட் சியில் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி 64 குடும்ப உறுப்பி னர்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணையும்  நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற் றது.  நன்னிலம் ஒன்றியம் கொட்டூரில் டி. சுதாகர் தலைமையில் 23 குடும்பத்தைச் சார்ந்த 40 பேர் கட்சியில் இணைந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். புதிதாக அமைக் கப்பட்ட கொடி மேடையில் மாவட்ட செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.  பண்டாரவடை ஊராட்சியில் கோவிந்தச்சேரி கிராமத்தில் மோகன சுந்தரம் தலைமையில் இளைஞர்கள் உட்பட 24 பேர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர். பண்டார வாடை ஊராட்சி மன்றத் தலைவரும் ஒன்றிய குழு உறுப்பினருமான பி.ஜெய சீலன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு  உறுப்பினர் எம்.ராமமூர்த்தி, பி.ராஜா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதி தாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் கொடியை ஏற்றி வைத்து பேசி னார். வாலிபர் சங்கத்தின் வெண்கொ டியை ஒன்றிய தலைவர் எஸ்.சுரேந்தர் ஏற்றி வைத்து பேசினார்.  பண்டாரவடை ஊராட்சி கிராமத்தில்  உள்ள மாங்குடியில் கிளை சார்பாக  புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் செங்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு சிபிஎம்  மாவட்ட குழு உறுப்பினரும், மாவட்ட கவுன்சிலருமான ஜெ.முகமது உதுமான்  தலைமை வகித்தார், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.சேகர் கொடி யேற்றி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர்,  மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.