districts

தனியார் இ சேவை மையம் பெரம்பலூர் ஆட்சியர் தகவல்

பெரம்பலூர், ஜூன் 13-

    பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையங்கள் அமைக்க உரிமம்  வழங்குவதில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.  மாவட்டத்தில் உள்ள  மாற்றுத்திறனாளிகள் <https://tnesevai.tn.gov.in> <https://tnega.tn.gov.in>ஆகிய இணையதளங்களில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சியும், கணினி பயன் படுத்தவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளைப் படிக்க வும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 100 சதுர மீட்டர்  பரப்பளவு கொண்ட இ-சேவை மைய கட்டடத்தில் கணினி  பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.  

    குறைந்தபட்சம் இரண்டு அதிவேக அலைவரிசை யுடன் தொடர்ச்சியான, தடையற்ற இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை யால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும்.  

      தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர் களுக்கு ஐ.டி எண் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். பெரம்ப லூர் மாவட்டத்தில் படித்த, கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.