கரூர், ஏப்.17-
கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலக் குழு சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல சங்க நிர்வாகி களுக்கான 2 நாள் இயக்க பயிலரங்கம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் எம்.கே.முருகன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் த.சகிலா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜ.ஜெயராஜ் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக்ரெய்மாண்ட் துவக்கி வைத்தார்.
தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் தமிழில் முற்போக்கு தடங்கள் என்ற தலைப்பிலும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கல்வி கொள்கை- எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பிலும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் ஆசிரியர் இயக்க வரலாறு என்ற தலைப்பிலும், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.மகாலட்சுமி இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு என்ற தலைப்பி லும் பேசினர்.