கந்துவட்டி கொடுமை ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை
அரியலூர், பிப்.21- அரியலூர் ரயில் நிலையம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக அரியலூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. நிகழ்விடத்திற்கு சென்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நரசிம்மலு (45) என்பதும், இவர், அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்ததில், இவர் பணம் வட்டிக்கு வாங்கியதில், இருவர் தம்மிடம் கந்து வட்டி போட்டு அதிகப்படியான பணத்தை பெற்று விட்ட தாகவும், மேலும், பணம் கேட்டு தொல்லைக் கொடுப்ப தால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ள தாகவும் கூறி வீடியோ ஒன்றை வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து அரியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பாபநாசம், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப், பாபநாசம் காவல் துறை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி யப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் பங்கேற்ற பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் செங்குட்டு வன், செயலாளர் நவநீத கிருஷ்ணன், பொருளாளர் பன்னீர் செல்வம் ராஜகிரி ஊராட்சி மன்ற உறுப்பினர் முபாரக் ஹீசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
தஞ்சாவூர், பிப்.22 - தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு வார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கியது. இதில், 2 லட்சத்து 92 ஆயிரம் கோழிகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், ‘‘தஞ்சை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடுவதற்கு இரு வார கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்த கால்நடை பராமரிப்பு துறையால் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு தகுதியாக உள்ள கோழிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, அனைத்து கோழி வளர்ப்பவர்களும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
பெருமகளூர் பேரூராட்சி நிர்வாக முறைகேடு: போராட்ட அறிவிப்பால் பேச்சுவார்த்தை செயல் அலுவலர் பிடிவாதம்: மீண்டும் போராடத் திட்டம்
தஞ்சாவூர், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம் பெரு மகளூர் பேரூராட்சியில் கடந்த 2018 முதல் 2021 வரை நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து, கிராம பொதுமக்கள், அனைத்து கட்சி சார்பில், பெரு மகளூர் கடைவீதியில் புதன் கிழமை சாலை மறியல் போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன் கிழமை காலை வட்டாட்சியர் த.சுகு மார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அரசுத் தரப்பில் பெரு மகளூர் செயல் அலுவலர் புனித வதி, காவல்துறை உதவி ஆய்வா ளர், பெருமகளூர் வருவாய் ஆய்வா ளர் யோகச்சந்திரன், பெருமக ளூர் வடபாதி கிராம நிர்வாக அலு வலர் செல்வம் ஆகியோரும், பொது மக்கள் தரப்பில், திமுக நிர்வாகிகள், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பெருமாள் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் பேசு கையில், ‘‘கூடுதலாக வசூலிக்கப் பட்ட சொத்து வரி திரும்பத் தரப்பட வில்லை. சொத்து வரி வசூலிப்பில் பல்வேறு குளறுபடிகள், முறை கேடுகள் நிகழ்ந்துள்ளன.
இதில், பேரூராட்சி தற்காலிக பணியாளராக உள்ள கணினி ஆப்ரேட்டர் சரிதா என்பவரால் பல் வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள் ளன. அவரது கணவர் கார்த்திகே யன் பேரூராட்சி நிர்வாகத்தில் தலை யிடுகிறார். கட்டிட உரிமம் வழங்கு வதில் முறைகேடுகள் நிகழ்ந்துள் ளன. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பெருமகளூர் பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள் ளன. மேலும் கோயில் திருக்குளம் அமைக்கும் பணியில் முறைகேடு கள் நடைபெற்று, பொதுமக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதுபோல் குடிநீர் இணைப்பு வழங்குவதிலும் குழப்பம் ஏற் பட்டுள்ளது. தற்காலிக கணினி ஆப்ரேட்டரை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவரது கணவர் பேரூ ராட்சி நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. அதேபோல் தூய்மைப் பணியா ளர்கள், இதர பணியாளர்களுக்கு அரசாணையின்படி ஊதியம் வழங்கப்படவில்லை’’ என தெரி விக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் புனிதவதி கூறுகையில், ‘‘சொத்துவரி மறுசீராய்வு தொடர் பாக அரசிடமிருந்து வரும் வழி முறைகள் பின்பற்றப்படும். இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாது. நிதி யாண்டின் இறுதிப் பகுதியில் இருப்பதால் வரிவசூல் தொடர் பான பணிகளை கணினியில் மேற்கொள்ளும் கணினி ஆப்ரேட் டரை பணியில் இருந்து நீக்கினால், நிதியாண்டு தொடர்பான வரிகள், கணக்குகளை முடிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே பணியாளரை நீக்க இரண்டு மாத காலம் அவகா சம் வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து வட்டாட்சியர் பேசுகையில், ‘‘2018 முதல் 2023 வரையிலான சொத்து வரி தொடர் பாக அரசுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையினை தொடர்ச்சியாக கண்காணித்து கருத்துரு பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும். கணினி தொடர்பான பணிக்கு புதிதாக ஒருவரை நியமனம் செய்து பிப்ரவரி 28 வரை பயிற்சி வழங்கிய பின் ஏற்கனவே உள்ளவரை பணி யிலிருந்து விடுவித்திட வேண்டும். அவரது கணவர் கார்த்திகேயனை எந்த பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது” என உத்தரவிட்டார். செயல் அலுவலர் பிடிவாதம் இதையேற்று பொதுமக்கள் கையெழுத்திட்டு சென்றனர். ஆனால், பேரூராட்சி செயல் அலுவலர் புனிதவதி மேலதிகாரி கள் அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாது என. கையெழுத்தி டாமல் புறக்கணித்து சென்றார். இதனால் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.
‘‘சோழ நாட்டில் பௌத்தம்’’ நூல் அறிமுக விழா
தஞ்சாவூர், பிப்.22- தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பா.ஜம்பு லிங்கம் எழுதிய, ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற நூலின் அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், கலைப்புல முதன்மையர் பெ. இளையாப்பிள்ளை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூலினை அறிமுகப்படுத்தி சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் பேசினார். நாட்டுப்புறவியல் துறை உதவிப்பேராசிரியர் சீமான் இளையராஜா வரவேற்றார். மொழியியல் துறை உத விப்பேராசிரியர் மா.ரமேஷ் குமார் நன்றி கூறினார். இலக்கியத்துறையில் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் மாணவர் ச.வாசுதேவன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணியாளர்கள், மாண வர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மனைப்பட்டா வழங்க அதிகாரிகள் உறுதி சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு
தஞ்சாவூர், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி சரகம் சானூப்பட்டி பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 22 அன்று காலை 7 மணிக்கு செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாலையப்பட்டி, வடக்கு மற்றும் தெற்கு, சானூரப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டும். நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் மனை இல்லாதவர்களுக்கு இலவச குடிமனைப் பட்டா மற்றும் இலவச நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.தமிழரசன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், பூதலூர் மண்டல துணை வட்டாட்சியர், செங்கிப்பட்டி தலைமை காவலர், செங்கிப்பட்டி சரக வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் எஸ். பாஸ்கர், ஒன்றிய நிர்வாகிகள் தமிழரசன், தமிழ்ச்செல்வன், செங்கிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், செங்கிப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா கோரியது தொடர்பாக பரிசீலனை செய்து, தகுதியற்ற நபர்களை நீக்கம் செய்து, புதிய நபர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் பட்டா வழங்கப்படும். வன்னியம் பட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு நிலம் கண்டறிந்து தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்கப்படும். வாரியில் உள்ள ஆக்கிரமனம் அகற்றப்படும். செங்கிப்பட்டி சரகத்திற்குட்பட்ட ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கண்டறிந்து, ஆக்கிரமனம் அகற்றவும், அதனை பட்டா வழங்கவும், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதனன்று நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஆவணம் சாலை இணைப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை
தஞ்சாவூர், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 11 ஆவது வார்டு உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகரிடம் மனு ஒன்றினைஅளித்தார். அந்த மனுவில், ‘‘பேராவூரணி முதன்மைச் சாலை - ஆவணம் சாலை இணைப் பில் இருந்த உயர்கோபுர மின்விளக்கு, சாலை விரிவாக்கம், சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைக்கும் போது அகற்றப்பட்டது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து 8 மாத காலம் ஆகியும், மீண்டும் உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகு தியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். எனவே, பேரூராட்சி பெருந் தலைவர், இதனை கருத்தில் கொண்டு, உடன டியாக ஆய்வு செய்து, போர்க்கால அடிப் படையில் மீண்டும் அதேஇடத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது. மனு வின் நகல் பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர் கலைப் போட்டிகள்
பொன்னமராவதி, பிப்.22- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வளமையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொன்னமராவதி வட்டார வள மையத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்களுக்கான மன்றப் போட்டிகளில் பள்ளிகளில் அரசு திரையிடச் செய்த சிறார் திரைப்படங்களிலிருந்து போட்டிகள் நடைபெற்றன. நிகழ்வை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ)பழ.நல்லநாகு, ஆசிரியர் முனைவர் ஞானமணி, மற்றும் ஆசியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் நடத்தினர்.
தண்டு ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்துறை ஆலோசனை
பேராவூரணி, பிப்.22- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் தண்டு ஈ தாக்குதல் காணப்படுகிறது. உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளில் தண்டு ஈ, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவை முக்கியமான பூச்சிகள் ஆகும். தண்டு ஈ தாக்குதலால் செடிகள் முற்றிலும் காய்ந்து போய்விடும். இதனைக் கட்டுப்படுத்த மானோகுரோட்டாபாஸ் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்று அளவில் கலந்து தெளிக்க வேண்டும். பயிற்சி பருவத்தின் போது தாக்கும் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ ஆகியவற்றை கட்டுப்படுத்திய மீத்தைல் டெமட்டான் அல்லது டைமீத்தோயேட் அல்லது பாஸ்போமிடான் இதில் ஏதாவது ஒரு மருந்தை இரண்டு மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மஞ்சள் தேமல் நோய் தென்பட்டால் உடனே பயிரை பிடுங்கி அப்புறப்படுத்துவது சிறந்த கட்டுப்பாடு ஆகும் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார்.