புதுக்கோட்டை, பிப்.16- பல ஆண்டுகளாக பணி புரியும் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடை யாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழு வதும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை யன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு புதுக் கோட்டை கிளை திட்டத் தலைவர் எஸ். சித்தையன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலை வர் கே.முகமதலிஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 240 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.ராஜா ராமன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கோவிந்த ராஜு, மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு காவல்துறையினரால் கைது செய்யப் பட்டனர்.
கரூர்
கரூர் மண்டல மின்வாரிய தலைமை பொ றியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு தலைமை வகித்தார். சிஐடியு கரூர் மாவட்டத் தலை வர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலா ளர் சி.முருகேசன், மின் ஊழியர் மத்திய மைப்பின் கரூர் மண்டலச் செயலாளர் க.தனபால், மாநிலத் துணைத் தலைவர் ஜி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போ ராட்டத்திற்கு கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.என்அனிபா, மாவட்டச் செயலாளர் டி. முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் மன் னார்புரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.