கும்பகோணம், ஜூன் 28- ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டி யில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாண வர் மாறன், 200 மீட்டர் ஓட்டப் பந்த யத்தில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர், நேபாளத்தில் நடைபெற உள்ள ஆசிய போட்டிக்கு தகுதிபெற்றும் குடும்ப வறுமை காரணமாக அப்போட் டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்ய வேண்டுமென மாணவர் மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன். இவர் கும்பகோ ணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி யில் பி.ஏ (ஆங்கிலம்) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவர் மாறனின் தந்தை சிறு வயதிலேயே காலமானார். தாய் மற்றும் தங்கையோடு வசித்து வருகிறார். தாய் விவசாய வேலைகளை கவனித்து, தனது குழந்தைகளை படிக்க வைக்கிறார். இதுகுறித்து தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற மாணவர் மாறன் தெரிவிக்கையில், “தேசிய, ஆசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பதற்காக, நான் எனது சுய முயற்சியில் எங்களது கிராமத்தில் தின மும் அதிகாலையில் பயிற்சி எடுத்து வரு கிறேன். என்னை ஊக்குவிப்பதற்கு, நான் படிக்கும் கல்லூரியோ, தன்னார்வ லர்களோ முன்வரவில்லை. இதனால் ஆசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும் எனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என அச்சம் ஏற்படுகிறது. மேலும் நான் படிக்கும் கும்பகோ ணம் அரசு கலைக் கல்லூரியில் எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. ஆனாலும் தேசிய அளவிலான போட்டி யில் பங்கேற்பதற்கான முயற்சியையும் பயிற்சியையும் தொடர்ந்து சுயமாக செய்து வருகிறேன். இந்நிலையில், எனது கல்லூரி நிர்வாகமும் தன்னார் வலர்களும் என்னை ஊக்குவித்து, பல்கலைக்கழக அளவில் நடைபெறும் போட்டியிலும் கலந்துகொள்ள பரிந்து ரைத்தால், வெற்றி பெற்று கல்லூ ரிக்கு பெருமை சேர்ப்பேன். மேலும் ஆசிய அளவிலான ஓட்டப் பந்தயத்தி லும் கலந்து கொண்டு, நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்” என்றார் வேத னையுடன். இதுகுறித்து சக மாணவர்களும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்கம் வென்ற மாணவர் மாறனை, கல்லூரியில் நேரில் சந்தித்து வாழ்த்தியும் ஊக்குவித்தும் நினைவுப் பரிசு வழங்கினர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கூறுகை யில், “கிராமத்திலிருந்து எவ்வித வசதி யும் இல்லாத மாணவர் தேசிய அளவி லான தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இவரை ஊக்குவிப்ப தற்கு தமிழக அரசு விளையாட்டுத் துறை யும் சம்பந்தப்பட்ட கும்பகோணம் அரசி னர் கலை கல்லூரி நிர்வாகமும் உதவிட வேண்டும். இவர் சாதனைகளைப் படைத்து வெற்றி காண பரிந்துரை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.