புதுக்கோட்டை, ஜன.10 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற் கான துவக்க விழா புதனன்று நடை பெற்றது. டெல்டா மாவட்டங்களில் நடை பெற்ற விழாக்களில் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், ஆட்சியர்கள் பங்கேற் றனர். புதுக்கோட்டை நகராட்சி, காமராஜபுரம் 10 ஆம் வீதியில், அரிசி குடும்ப அட்டைதா ரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், இலவச வேட்டி, சேலை களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலை மையில் வழங்கினார். கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை, கீரனூர் ஆகிய இடங்க ளில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், புதுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்து ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள நியாய விலைக் கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். இதில் மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், நாகை நகர் மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில், குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப் பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலை மையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் வழங்கினார். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக் காடு, கழுமங்குடா, புதுப்பட்டிணம், ஆண்டிக் காடு, பள்ளத்தூர், சொக்கநாதபுரம், புக்கரம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நியாய விலைக் கடைகளில், குடும்ப அட்டைதா ரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பெருந்த லைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை யில் நடைபெற்றது.
பாபநாசம்
பாபநாசம் அரையபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் அரையபுரம் அங்காடி கிளையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, சிறு பான்மை பிரிவு அனிபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோன்று மெலட்டூர் அருகே கொத் தங்குடி ஊராட்சி, எடக்குடி ரேசன் கடை யில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட் டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, மாவட்டக் கவுன்சிலர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராஜகிரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை திமுக தெற்கு ஒன்றியச் செயலர் நாசர் வழங் கினார். சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரெகு நாதபுரம் ரேசன் கடையில் நடந்த நிகழ்ச்சி யில், செயலர் கலியமூர்த்தி, அய்யம்பேட்டை யில் நடந்த நிகழ்ச்சியில் திமுக அய்யம் பேட்டை பேரூர் செயலர் துளசி அய்யா, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பக்கீர் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர்
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத் தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் வட்டாரம், ஆறுபாதி ஊராட்சி யில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கி னார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.