districts

img

திருபுவனம் அரசுப் பள்ளிக்கு இடம் வழங்கக் கோரி கையெழுத்து இயக்கம்

கும்பகோணம் அக்.13 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டுக்குப் புகழ்பெற்ற திருபு வனத்தில், 1902 ஆம் ஆண்டு அரசு தொடக்கப்  பள்ளியாக துவங்கி, மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 121 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.  தற்சமயம் இந்தப் பள்ளியில் 900 பேரும்,  தொடக்கப் பள்ளியில் 450 பேரும் என மொத்தம் 1350 மாணவ-மாணவிகள் பயின்று  வருகின்றனர். 500 மாணவ-மாணவிகள் மட்டும் படிக்க வசதி உள்ள இந்த இடத்தில்,  1350 மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத் துடன் பயின்று வருகின்றனர். திருபுவனம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2  வகுப்பறைகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் ஆறு வகுப்பறைகள் கட்டும் பணியும், திகோ சில்க்ஸ், பேரூராட்சி நிதி உதவி மூலம்  கழிப்பறை கட்டிட வசதியும் மேற்கொள் ளப்பட்டுள்ளது.   இருப்பினும் பள்ளியில் நிலவும் இடப்  பற்றாக்குறையால், தேவைக்கேற்ப வகுப் பறை இல்லாமல், காற்றோட்டமின்றி நெருக் கடியான சூழலில் குழந்தைகள் பயில்கின்ற னர். பள்ளியில் ஆய்வுக் கூடம் அமைக்கவும், மேல்நிலை வகுப்பில் ஆங்கில வழி பிரி விற்கும் துவங்குவதற்கும் இடவசதி இல்லை. போதுமான கழிப்பறை வசதி இல்லாத தால் மாணவர்கள் குறிப்பாக, பெண் குழந் தைகள் சிரமப்படுகின்றனர். பள்ளியில் விளையாட்டு மைதானமும் இல்லை.  இந்நிலையில் விராலிமலை சதாசிவ மடத்திற்கு எதிரில் 72,000 சதுர அடி இடம் (சர்வே எண்.647/20) தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு, திருபுவனம் பேரூ ராட்சி நிர்வாகத்தின் வசம் உள்ளது. தமிழக அரசு இவ்விடத்தின் மீது தருமபுரம் ஆதீனம்  பெற்றுள்ள உயர்நீதிமன்ற தடையா ணையை நீக்கி, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, இந்த இடத்தை திருபுவனம் அரசுப் பள்ளி பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். திருபுவனம் மேலவீதியில் சர்வே  எண். 619/1-ல் அமைந்துள்ள இடத்தை திருபு வனம் கிளை நூலக சொந்த கட்டிட பயன் பாட்டிற்கு வழங்கிட வேண்டும்.  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.17 (செவ்வாய்) அன்று மாலை 3 மணிக்கு  திருபுவனம் ஸ்ரீகம்பகரேஸ்வரர் சுவாமி கோயிலி லிருந்து, நான்கு வீதிகள் வழியாக பேரணி வந்து திருவிடைமருதூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பொதுமக்கள் மற்றும் அனைத்து சமூக நல அமைப்பு கூட்டுக் குழு இயக்கம் சார்பில் திருபுவனம் கடை வீதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற் றது. கையெழுத்து இயக்கத்திற்கு திருபு வனம் சமூக நல அமைப்பு கூட்டுக் குழுவின்  தலைவர் சா.ஜீவபாரதி, பொதுச் செயலா ளர் டி.எம்.ராம்குமார், பொருளாளர் உதய குமார் உள்ளிட்ட பலர் கையொப்பமிட்டனர்.