districts

img

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புகைப்பட கண்காட்சி

பெரம்பலூர், நவ.2 - பெரம்பலூர் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில், பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல் பாடுகள் சேவைகள் மற்றும் சாதனை கள் குறித்த மாபெரும் புகைப்படக் கண்காட்சி நடந்தது.  இந்த புகைப்படக் கட்சியை பெரம்ப லூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி யும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பல்கீஸ் திறந்து  வைத்து பார்வையிட்டார். புகைப்பட கண்காட்சியில் சட்ட தன்னார் வலர்களுக்கான பயிற்சி பட்டறை, பட்டியல் வக்கீல்களுக்கான பயிற்சி வகுப்பு, மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, தேசிய மக்கள் நீதிமன்றம், மனநிலை பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்த விழிப்புணர்வு முகாம், முதி யோர்களுக்கான சட்ட விழிப்புணர்வு  முகாம், அமைப்புசாரா தொழிலாளர் களுக்கான விழிப்புணர்வு முகாம், பாலி யல் தொல்லைகள் குறித்த சட்ட விழிப்பு ணர்வு முகாம், சட்ட உதவி மையம் சார்பாக பெரம்பலூர் கிளைச் சிறையில் நடத்திய ஆய்வு, வறுமை எதிர்ப்பு தினம்  கடைப்பிடிப்பு, நீதிமன்ற நடைமுறைகள், சிறை வாசிகளுக்கான சட்ட விழிப்பு ணர்வு முகாம். திருநங்கைகளுக்கு, கல்லூரி மாண வர்களுக்கு, புலம்பெயர் தொழிலாளர் களுக்கு, முதியோர்களுக்கு, மன நலம் குன்றியவர்களுக்கு, வங்கிகள் மற்றும் பொது மக்களுக்கு, கொத்தடிமை தொழி லாளர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் காணொலி மூலமாக நடந்த சட்ட உதவி  விழிப்புணர்வு முகாம் ஆகியவை தொடர் பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் நீதிபதிகள், பெரம்பலூர் அட்வகேட் அசோசியசன் சங்கத் தலைவர் செந்தாமரை கண்ணன், பார் அசோசி யேசன் செயலாளர் சேகர் உட்பட வழக்கறிஞர்கள், சட்ட பாதுகாப்பு ஆலோ சகர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.