districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை அட்டை வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

கும்பகோணம், ஜூன் 14-

    தஞ்சை மாவட்டம் கும்ப கோணம், பாபநாசம் மற்றும் திருப்ப னந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவல கங்களில் ஆணையரை சந்தித்து  கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு  திட்டத்தின் கீழ் வேலை தேவைப் படும் மாற்றுத் திறனாளிகள் அனை வருக்கும் 100 நாள் வேலை அட்டை  வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்  றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் மனு  கொடுக்கும் இயக்கம் நடைபெற் றது.

    மனு கொடுக்கும் இயக்கத் திற்கு தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் பழ.அன்புமணி  தலைமை வகித்தார். கும்ப கோணம் பொறுப்பாளர் பாரூக், பொருளாளர் ராஜேஸ்வரி, கும்ப கோணம் ஒன்றியத் தலைவர் காமா ட்சி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

   கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்ளில் அந்தந்த பகுதி யைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி களை ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.  

   மனுவில், ‘‘வேலை பெற  விரும்பும் அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் நீல நிற அடை யாள அட்டை வழங்கப்பட்டு 100  நாள் வேலை வழங்கப்பட வேண்  டும். வேலை செய்யும் மாற்றுத்திற னாளிகளுக்கு தின கூலியாக ரூ.294 குறையாமல் வழங்கப்பட வேண் டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

   மாற்றுத்திறனாளிகளின் மனு வை அவர்கள் இருக்கும் இடத் திற்கே வந்து பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைவில் ஆவன செய்வதாக உறுதியளித்தனர்.