பேராவூரணி, மே 12-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பள்ளிக்கு வருகை தந்த 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் வீ.சாந்தி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். நான் முதல்வன் திட்ட பள்ளி ஒருங்கிணைப்பா ளர்கள் மா.காளீஸ்வரி, எஸ்.மீனாகுமாரி, ஆசிரியை எஸ்.உமாராணி ஆகியோர் ஆலோசனை வழங்கிப் பேசினர். மேலும், மாணவிகள், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.