districts

பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

தஞ்சாவூர் ஜூன் 16-  

      தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ், பட்டுக் கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற் பிரிவுகளான மின்பணியாளர் (2 ஆண்டுகள்), கணிப்பொறி  இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (ஒரு  ஆண்டு), உணவு தயாரித்தல் (பொது) (ஒரு ஆண்டு), தை யல் தொழில்நுட்பம் (1ஆண்டு) ஆகிய தொழிற்பிரிவுகளுக் கான சேர்க்கை, வருகிற ஜூன் 20- ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

     இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் பட்டுக்கோட்டை கூட்டு றவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை சாலை, நாடிமுத்து நகர்-அஞ்சல், பட்டுக்கோட்டை-614602 என்ற முகவரியில் நேரில்  வந்து சேர்ந்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் இளங் கோவன் தெரிவித்துள்ளார்.