districts

img

இடியும் நிலையில் பயணியர் நிழற்குடை

திருத்துறைப்பூண்டி. டிச.9- திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் அரசினர் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள பயணியர் நிழற்குடை மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. பள்ளியில் பயிலக்கூடிய ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இங்கு காத்து இருந்துதான் பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.  எனவே, ஆபத்தான நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை உடனடியாக அகற்றி விட்டு புதிய  நிழற்குடை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;