தஞ்சாவூர், ஆக.9- பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் உரு வாக்கியுள்ளார். இத்திட்டத்தை கோவை மாவட்டத்தில் வெள்ளியன்று கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து டெல்டா மாவட் டங்களில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்க விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் விழா நடை பெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவை யாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரன், மாநகராட்சி மேயர் சண்.இராமநா தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 85 உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 9,057 மாண வர்கள், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின்கீழ் பயன் அடைகின்றனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டம், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் 500 மாணவர்களுக்கு “தமிழ்ப் புதல்வன் திட்டம்” கீழ் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை, (ஏடிஎம் அட்டை) உயர்கல்வி வழி காட்டு கையேட்டினை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பால சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தம் 4054 பயன்பெறுவர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம் பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில், “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் 2837 மாணவர்களுக்கு வங்கிப் பற்று அட்டை களை (டெபிட் கார்டு) மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயி லாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் ஆகியோர் வழங்கினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 21 கல்லூரிகளைச் சேர்ந்த 2837 மாணவர்கள் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரம், ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆலங்குடியை அடுத்த கீழாத்தூர், அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல்துறை அமைச் சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பற்று அட்டை களை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டத் தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன்பெற 65 கல்லூரிகளைச் சேர்ந்த 6,978 தகுதி யான மாணவர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.