மயிலாடுதுறை, செப்.25 - ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிகளின் முன்னெடுப்பாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம் காத்தான்சாவடி பகுதியில் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், சமூக ஆர்வலர் கள் மூலம் பனை விதைகள் சேகரிப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார். முகாமினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் உரையாற்றுகை யில், “நுங்குவிற்கு இணையாக ஏதும் இல்லை. பனை கிழங்கும் நாம் உண்ண லாம். இது ஒரு உன்னதமான பொருள். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடி யது. அதுபோல் பனை ஓலையும் பயன் தரக்கூடியது. பனை மரம், வீடு கட்டு வதற்கு உபயோகமாக இருக்கிறது. பெரிய அலை வந்தாலும் தடுக்கும் அளவிற்கு இருக்கும். கடந்தாண்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் 65 லட்சம் பனை மரங்கள் நடப்பட்டு உள்ளன. இவை, 25 வருடங்களுக்குப் பின், நமக்கு பிறகு வரும் சந்ததி யர்களுக்கு உபயோகமாக இருக்கும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றாற் போல் நாம் பல மரங்களை நட்டு வைக்க வேண்டும். ஏற்கனவே ஒரு லட்சம் பனை விதைகளை சேகரித்துள்ளனர். நமது மாவட்டத்தில் குறைந்தபட்சம் நாம் 5 லட்சம் மரங்களையாவது நட வேண்டும். இதன் முன்னெடுப்பாக தற் போது பனை விதைகள் சேகரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார். தொடர்ந்து, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இப்பனை விதை சேகரிப்பு பணிகளில் தரங்கம்பாடி பொறையார் த.பே.மா.லு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.