தமிழக அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராகவும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியக்குழு சார்பில் செவ்வாயன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருவெறும்பூர் கடைவீதியில் நடைபெற்ற இயக்கத்தை தாலுகா செயலாளர் மல்லிகா தொடக்கி வைத்தார். மாவட்ட குழு, தாலுகா குழு உறுப்பினர்கள் மற்றும் கூத்தையார் பேரூராட்சி கவுன்சிலர் நித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.