districts

அஞ்சல் துறையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

தஞ்சாவூர், ஆக.4 -  

    அஞ்சல் துறையில் காலாவதி யான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ள தள்ளுபடியுடன் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அஞ்சல் துறையின் தஞ்சாவூர் கோட்ட முது நிலை கண்காணிப்பாளர் தங்க மணி தெரிவித்துள்ளார்.  

       இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த பிரீமியம் மற்றும் அதிக போனசுடன் அஞ்சல்  ஆயுள் காப்பீடு பாலிசி மற்றும் கிரா மிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி  சேவைகள் வழங்கப்பட்டு வரு கின்றன. பாலிசி தொடங்கிய வாடிக் கையாளர்கள்,  பல்வேறு சூழல் காரணமாக தங்கள் தவணைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தத் தவறி விடுவதால், அந்த  பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன.  

    காலாவதியான பாலிசிகளை அபராதத் தொகையுடன்தான் புதுப் பிக்க முடியும். தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குநரகம் ஜூன் 1  முதல் ஆகஸ்ட் 31 வரையிலான கால கட்டத்தில், காலாவதியான பாலிசி களைப் புதுப்பிக்கும் வாடிக்கையா ளர்களுக்கு அபராதத் தொகை யில் 25 சதவீதம் முதல் 30 சதவீதம்  வரை அதிகபட்சம் ரூ. 2,500 முதல்  ரூ. 3,500 வரை விலக்கு அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது.  

     மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகலாம். இந்தச் சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டும் வழங்கப் பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை  வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை சலுகை தள்ளுபடியுடன் புதுப் பித்துக் கொள்ளலாம்” என்றார்.