கரூர், செப்.25 - கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்றத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி களில் சட்டமன்ற உறுப் பினர் இரா.மாணிக்கம் புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். குளித்தலை சட்ட மன்றத்துக்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி ஈச்சம்பட்டி வழியாக வேப்பங்குடி வரை ரூ.2 கோடியில் தார்ச் சாலை பணியை தொடங்கி வைத்தார். ரூ.8. 50 லட்சத்தில் புதிய நாடக மேடையை ஆத னூரில் திறந்து வைத்தார். சின்னையம்பாளையம் ஊராட்சியில் ரூ.23.56 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலு வலகத்தை திறந்து வைத்தார். வத்தபிள்ளை யூர், நாகனூர், கல்லடை, பள்ளிப்பட்டி ஆகிய கிராமங்களில் புதிய அங்கன்வாடி மை யங்கள், சின்னம்மாநயக்கனூர், பொம்மை நாயக்கனூர் ஆகிய கிராமங்களில் சிறு சமுதாய கூடங்களை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தோகைமலை ஒன்றியக் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், முன்னாள் எம்எல்ஏ ராமர், தோகைமலை பிடிஓ மணிமேகலை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலை வர்கள் கலந்து கொண்டனர்.