வெண்மணி நினைவு தினத்தையொட்டி, சிபிஎம் திருவாரூர் ஒன்றியக் குழு சார்பில் செங்கொடி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.சுந்தரய்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பயன், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி கோசி மணி, ஒன்றிய குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.