தஞ்சாவூர், டிச.8- தஞ்சாவூர் மாநகரத்தின் மையப் பகுதி யான பழைய பேருந்து நிலையம் வந்து, பொதுமக்கள் வணிகம் செய்யும் பிரதான வழியாக மாட்டு மேஸ்திரி சந்து உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும், வணிகர்களும் இந்த இடத்தில் அமைந் துள்ள டாஸ்மாக் கடையால் சொல்ல முடி யாத துன்பங்களை அனுபவித்து வரு கின்றனர். இடிந்து விடும் நிலையில் பழைய கட்டி டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, பல கட்ட போராட் டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து நடத்தியுள்ளது. அப்போது, தஞ்சாவூர் வட்டாட்சியராக இருந்த சக்திவேல் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், 2023 அக்.10 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடை அப்புறப்படுத் தப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட் டது. அந்த உறுதிமொழியை அரசும், அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த வில்லை. தற்போது வரை அங்கு டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் டிச.11 (திங்கள்கிழமை) நடத்தப்படும். இது தொடர்பாக, டிச.8 அன்று மாலை தெரு முனைக் கூட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வ பாண்டியன், மேற்கு காவல் ஆய்வாளர் சந்திரா ஆகியோர் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததின் பேரில், வெள்ளிக்கிழமை காலை டாஸ்மாக் நிர்வா கக் கட்டிடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், டிச.30 ஆம் தேதி கடையை மூடுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் எழுத்துப் பூர்வமாக உறுதியளிக் கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, இ.வசந்தி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.