districts

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களின் எம்பிஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி

திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- ஆதிதிராவிட, பழங்குடி யினப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் எம்பிஏ சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு எழுத இல வச பயிற்சி வகுப்பு நடத்தப்  படுகிறது. தமிழ்நாடு ஆதிதிரா விடர் விட்டுவசதி மற்றும் மேம்  பாட்டுக் கழகம் (தாட்கோ)  சார்பில், ஆதிதிராவிடர் மற்  றும் பழங்குடியின பிரிவி னைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படை யிலான பயிற்சிகள் வழங்  கப்படுகின்றன.இதன் ஒரு  பகுதியாக, இந்திய மேலா ண்மைக் கழகம் (ஐஐஎம்), இந்திய தொழில்நுட்பக் கழ கம் (ஐஐடி) போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) மேற்படிப்பு பயில  நிகழ் ஆண்டு நவம்பர் 2023ல் பொதுநுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த  பொது நுழைவுத் தேர்வுக் கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சியைப் பெற  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அல்லது கல்லுரி களில் இறுயாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் விண் ணப்பிக்கலாம், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்  சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். தேர்வுக்கு விண் ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாகவே நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்  ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தரம்  வாய்ந்த பயிற்சி நிறுவனத் தின் மூலம் பயிற்சியில் சேர் வதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள்  தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்ட மாண வர்களுக்கு தேசிய அளவி லான அனைத்து வகை நுழை வுத் தேர்வுப் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழை வுத் தேர்வுக்கான பயிற்சி யை வெற்றிகரமாக முடிக் கும் பட்சத்தில் அடுத்த கட்ட  தேர்வுகளான நேர்காணல், குழு விவாதம், எழுத்துத் திற னறித் தேர்வு ஆகியவற் றுக்கு பயிற்சி அளிக்கப் படும். சேர்க்கை கிடைத்த வுடன் எம்பிஏ பயில ஆகும் சுமார் ரூ.25 லட்சம் செலவை தாட்கோ அல்லது வங்கிகள் மூலமாக கல்விக்கடனாகப் பெற்றுத் தரப்படும். இப் பயிற்சிக் காலத்தில் மாண வர்களுக்குத் தேவையான மடிக்கணிணி வசதிகள் தாட்கோ மூலமாக ஏற்பாடு செய்து தரப்படும். விருப்ப முள்ள மாணவர்கள், தாட் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் முழு வதும் தாட்கோ மூலம் வழங்கப்படும். கூடுதல் விவ ரங்களுக்கு, திருச்சிராப் பள்ளியில் உள்ள தாட்கோ  மாவட்ட மேலாளர் அலுவல கத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் மா.பிர தீப்குமார் தெரிவித்துள்ளார்.