districts

img

தியாகதுருகத்தில் ரூ.3.95 கோடியில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சி, ஜூலை 29- கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துரு கத்தில் ரூ.3.95 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் 1968 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில், புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ரூ. 3 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில், திங்களன்று (ஜூலை 29) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.   மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமை தாங்கி ரிப்பனை வெட்டினார். சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், மக்களவை உறுப்பினர் மலையரசன் ஆகியோர் குத்து விளக்கை ஏற்றி வைத்தனர்.  மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக் குழுத் தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன், அட்மா திட்ட குழு தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் துரைமுருகன் வரவேற்றார். இதில் சின்னசேலம் ஒன்றியக் குழு தலைவர் சத்தியமூர்த்தி, கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்பராயலு, பேரூ ராட்சித் தலைவர் வீராசாமி, செயற்பொறி யாளர் செல்வகுமாரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் நன்றி கூறினார்.