மயிலாடுதுறை, அக்.2 - மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீன்பிடி துறைமுகம் வடக்கு, புதுக்குப்பம் கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய நேர்கல் சுவர் மற்றும் வலைப்பின்னும் கூடக் கட்டிடம், அணுகு சாலை ஆகியவற்றை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திங்களன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மீன்பிடி துறைமுக திட்ட கோட்டச் செயற்பொறியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.