காளான் வளர்ப்பு மைய துவக்க விழா
தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில், நுண்ணுயிரியல் துறை சார்பில், காளான் வளர்ப்பு மைய துவக்க விழா நடை பெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் பயிற்சி பட்ட றையை துவக்கி வைத் தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணைமுதல் வர் ரா.தங்கராஜ் மற்றும் விஞ்ஞானி ஞானபிரகா சம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பிரின்ஸ், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் ஆகியோர் செய் திருந்தனர்.
வாலிபர் சங்க சிறப்பு பேரவை
திருத்துறைப்பூண்டி, ஜூலை 28 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்க ஒன்றிய சிறப்பு பேரவை தியாகி சிவரா மன் நினைவிடத்தில் நடை பெற்றது. ஒன்றியத் தலை வர் சி.வீரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் ஏ.கே.வேலவன் முன் னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு நவீன கட்டில் வழங்கல்
தஞ்சாவூர், ஜூலை 28- பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நவீன மடக்கு கட்டில் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரோட்டரி சங்கம் சார்பில் பேரா வூரணி பெருந்தலைவர் அரசு காமராஜர் மருத்துவ மனைக்கு, ரோட்டரி சங்க உறுப்பினர் என்.கௌத மன் நிதி உதவியில், ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான நவீன மடக்கு கட்டில் மற்றும் முதியோர்களுக் கான 100 டயபர் ஆகியவை மருத்துவர் ராமசாமியிடம் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கத் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம், செங்கமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில், இரண்டு நாள் மென் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது. தன்னை அறிதல், தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளுதல், நேர்மையான வாழ்வி யலை வழக்கமாக்கி கொள் ளுதல், நேர மேலாண்மை, இடர் தாண்டுதல், கூட்டு உழைப்பு, வலிமை அறி தல் போன்ற தலைப்பு களில் பயிற்றுநர் இளங்கோ முத்து பயிற்சி வழங்கி னார். பயிற்சியை பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசி ரியர் சிலம்பரசன் தொ டங்கி வைத்தார். அறக் கட்டளை திட்ட ஒருங்கி ணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் பயிற்சி யின் நோக்கம் குறித்து விளக்கம் அளித்தார். மாண வர்களுக்கு பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வண்டல் மண்ணை செங்கல் சூளைக்கு கடத்துவதாக புகார் ஆட்சியரிடம் மனு
பொன்னமராவதி, ஜூலை 28 - விவசாயத்திற்கு என்று கூறி வண்டல் மண்ணை அனுமதி யின்றி அதிகளவில் எடுத்து, பெரிய டாரஸ் லாரிகள் மூலம் செங்கல் சூளைக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவடடம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் செம்பூதி பித்தன் கண்மாயில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய அள வில் டாரஸ் வண்டிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டு, செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதாக கண்டெடுத்தான் பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அம்மனுவில், “விவசாயத்திற்கு என்று கூறி விதிகளை மீறி பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய டாரஸ் வண்டிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டு, செங்கல் சூளைக்கு பயன்படுத்தப் படுவதாகவும் அரசு இது தொடர்பாக உரிய தனி அதி காரியை நியமித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்” தெரிவித்துள்ளனர்.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டி.ஜி.பி. பாராட்டு
தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூர் சரகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 67 காவல் அலுவலர்கள், காவலர்களுக்கு தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) சனிக்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தஞ்சாவூரில், தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தஞ்சாவூர் சரகத்துக்கு உள்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுடன் வெள்ளியன்று கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத் தில் சரக மாவட்டங்களைச் சார்ந்த காவலர்களுக்கான குறை தீர் முகாமை சனிக்கிழமை நடத்தி, 482 காவல் அலுவ லர்கள், காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்து, உடனடி யாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். பின்னர், சரக மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்த, திருடு போன பொருள்களை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்த 67 காவல் அலுவலர்கள், காவலர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி னார்.
தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை, ஜூலை 28 - ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் சனிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் உட்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார். அரியலூர் அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலர் இரா.தி.சபாபதி மோகன் உரையாற்றினார்.
உப்பிலியபுரத்தில் விவசாயிகள் சங்க புதிய கிளை துவக்கம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 28- திருச்சி புறநகர் மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய கிளை துவங்கப் பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன், விவசாயிகள் சங்க உப்பிலி யபுரம் தலைவர் முத்துசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் முத்துகுமார், அன்பழகன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் இரா.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தலைவராக ப.ராஜேந்திரன், துணைத் தலைவராக ப.ஆனந்த், செயலாளராக வீ.சௌந்திரராஜன், துணைச் செயலாளராக பெ.செல்வகுமார், பொருளாளராக பெ. மாசிமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். எரக்குடி டிரான்ஸ்பார்மர் முதல் மேட்டுப்பாளையம் வரை சாலையை தரம் உயர்த்தக் கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் இந்தச் சாலையை மேம்படுத்த வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துமாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு
அரியலூர், ஜூலை 28 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் நிலை யத்தில் காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள் காக்கி சீருடை கள் அணிந்து ஆட்டோ ஓட்ட வேண்டும். மது அருந்தி விட்டு ஆட்டோ ஓட்டக் கூடாது. இரவு நேரங்களில் பயணிப் பவர்களின் விலாசங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் ஆட்டோவில் ஏறி பயணித்தால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரி விக்க வேண்டும். அவர்களுடைய முக்கியமான அடை யாள அட்டைகள் பற்றியும், செல் நம்பரையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது அரசு பான் மசாலா, குட்கா ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களை தடை செய்துள்ளது. சில பயணிகள் போலீசாருக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோவில் புகையிலைப் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு சந்தேகப்படும் படி யான நபர்கள் பயணித்தால் உடனடியாக காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் மட்டுமே இதை தடை செய்ய முடியாது. ஆட்டோ ஓட்டு நர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் ஆட்டோ சேவைக்காக வரும் பெண் பயணிகளை, பாதுகாப்பாக அவர்கள் கூறும் முகவரி யில் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் பள்ளி குழந்தை களை அளவாக ஏற்றிச் செல்ல வேண்டும். சாலையில் விபத்து நடந்தால் உடனே உதவி செய்யுங்கள். பயணிக ளிடம் கண்ணியத்துடனும், நியாயமான வாடகையில் அழைத்துச் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப் புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் பங்கேற்றனர்.
நூலகம், அறிவுசார் மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்
திருவாருர், ஜூலை 28 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சி, எழில் நகரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1.17 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கடந்த ஜூலை 24 அன்று திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நன்னிலம் பேரூராட்சி பகுதியில், 3140 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் வரவேற்பு அறை, படிப்பகம், பயிற்சியறை (கலந்தாய்வு கூடம்), பாதுகாக்கப்பட்ட குடிநீர், சிசிடிவி கேமரா, கணினி, வாகன நிறுத்துமிட வசதி ஆகியவை யும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் டிஎன்பி எஸ்சி, எஸ்எஸ்சி போன்ற போட்டி மற்றும் திறனறி தேர்வு புத்தகங்கள், தமிழ் இலக்கிய புத்தகங்கள். வரலாறு, அரசி யல் தொடர்பான புத்தகங்கள், கலைக்களஞ்சியம், பொது அறிவு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. இந்நூலகம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யிலும், மாணவ-மாணவிகளுக்கும் மிகுந்த பயனுள்ள தாக இருக்கும். போட்டித் தேர்வு மாணவர்கள் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பயன்படுத்தி கொள்ளு மாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு கோரி ஜூலை 30-இல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கரூர், ஜூலை 28- மாயனூர் கதவணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆலோசனை கூட்டம் மாயனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளரும், கதவ ணையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங் கிணைப்பு குழுவின் செயலாளருமான கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாயனூர் கதவணையால், நிலத்தை கொடுத்து விட்டு உரிய இழப்பீடு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றி யம் மாயனூர் கதவணைக்கு 2008 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக மாயனூர், மேல மாயனூர், கட்டளை, ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவர்களுக்கு நீர் வளத்துறையும், வருவாய்த் துறையும் தற் போதுவரை இழப்பீடு தொகை வழங்க வில்லை. உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாயனூர் கதவணையால் நீர்த்தேக்கி வைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் விவசா யம் செய்ய முடியவில்லை. எனவே அவர் களுக்கு ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் இழப் பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மாயனூர் நீர்வளத்துறை பிரிவு அலுவலகம் முன்பு ஜூலை 30 அன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மண்ணின் தன்மைக்கேற்ப தரமான புதிய ரக நெல் விதைகளை வழங்க கோரிக்கை
திருவாரூர், ஜூலை 28- மாவட்டத்தின் மண் தன்மைக்கேற்ப தரமான புதிய ரக நெல் விதைகளை வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி பேசுகையில், “தமிழக அரசு அறிவித்துள்ளபடி கர்நாடக அரசிடமிருந்து 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். காவிரியில் கர்நாடக அரசே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தண்ணீருடைய வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை கொள்ளளவு 92 அடியை கடந்துவிட்டது. குறுவை சாகுபடி இல்லை என்று ஆன நிலையில், சம்பா சாகுபடியை துவங்கிட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும். விதை நெல் சேமிப்பு, சம்பா சாகுபடிக்கு தேவையான பயிர் கடன் உள்ளிட்ட நடவடிக்கை களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மழை பெய்தால், காற்று அடித்தால், தாங்கி நிற்கக் கூடிய புதிய ரக நெல் விதைகளை நமது மாவட்டத்தின் மண்ணுக்கு ஏற்ப ஆராய்ச்சி பண்ணைகளிலிருந்து தெரிவித்து வழங்க வேண்டும். கோ 53,54 போன்ற ரகங்கள் மிகவும் சன்னமாக உள்ளன. விளைச்சல் இருந்தாலும் நெல் எடை நிற்கவில்லை. எனவே நஷ்டம் ஏற்படாத வகையில், எடை நிற்கக்கூடிய புதிய வகை நெல் ரகங்களை வழங்கிட வேண்டும். தமிழக அரசு அறிவித்திருக்கிற மின் கட்டண உயர்வுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்டனம் தெரிவிக்கிறோம். அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மேலும் மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் விவசாயம் சிறப்பான முறையில் தொ டர்ந்து நடைபெறுகிறது. இதற்கு காரணம் அங்கு கூடுதலாக அமைக்கப்பட்டு இருக்கிற இலவச மின் இணைப்புதான். மற்ற பகுதிகளுக்கும் வழங்க வேண்டிய மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் வகையில், மயில்களின் தொல்லை அதிகமாகி வருகிறது. மயில்களைக் கட்டுப்படுத்திட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திக் கடை ஊராட்சி வெண்ணாற்றில் குப்பை கொட்டப்படுவது இதுவரை நிறுத்தப்பட வில்லை. அதற்கான இடத்தை தேர்வு செய்து குப்பைக் கழிவுகளை கொட்ட வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு ஆறுகள், வாய்க் கால்களில் அதிகளவு மணல் கொள்ளை நடக் கிறது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலேயே மிக ஆழமாக மணலை தோண்டி இரவு நேரங்களில் எடுத்துச் செல்கிறார்கள். ஒப்பந்தகாரர்கள் செய்யும் இந்த முறைகேடு களை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், குட்டைகளை ஊராட்சி நிர்வா கம் மூலம் தூர்வார வேண்டும். கோயில் இடங்களில் குடியிருந்து வருபவர் களிடம், நியாயமான வாடகையை வசூல் செய் வதில்லை. அதேபோல குத்தகை செய்யும் விளைநிலங்களுக்கும் கூடுதல் செலுத்த நிர்பந்திக்கின்றனர். எனவே ஆட்சியர் இப்பிரச்ச னைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.