தஞ்சாவூர், மே 11 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி - செங்க மங்கலம் அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவி கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 148 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி பா.ஹரணியா 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலி டத்தை பிடித்தார். மாணவி த.அட்சயாஸ்ரீ 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவி இ.அபர்ணாஸ்ரீ 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும், மாணவி அ.ஸ்ரீநிதி 490 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத் தையும் பிடித்தனர். கணிதப் பாடத்தில் 12 பேரும், அறிவியல் பாடத்தில் 2 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 10 பேரும் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளி யின் தாளாளரும், மூவேந்தர் அறக்கட்டளை தலைவருமான வி.ஏ.டி சாமியப்பன், செய லாளர் இ.பி.ஏகாம்பரம், பொருளாளர் ஆர். வேல்சாமி மற்றும் அறங்காவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளியின் முதல்வர் கணே சன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.