districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 7-  

    திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் புதனன்று நடைபெற்ற விழாவில் தலா ரூ.83,500 மதிப்பில் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.10 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

     இதனைத் தொடர்ந்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கல்லக்குடி, காட்டுப் புத்தூர், கூத்தப்பார், மண்ணச்சநல்லூர், புள்ளம்  பாடி, ச.கண்ணனூர், சிறுகமணி, தாத்தை யங்கார்பேட்டை, தொட்டியம் பேரூராட்சிகளுக்கு மொத்தம் 31 மின்கல வாகனங்கள், 9 பேரூராட்சி களில் வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பை களை சேகரம் செய்திடும் வகையில் 31 மின்கலத் தினால் இயங்கும் வாகனங்களை கொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.  

   முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது  முதிர்ந்தோர் பயன்பெறும் வகையில் மாவட்ட நலப்பணி நிதிக் குழு நிதியிலிருந்து ரூ.4.79 லட்சம் மதிப்பீட்டில் 8 இருக்கைகளுடன் கூடிய பேட்டரியால் இயங்கும் சிறப்பு வாகனத்தை  அமைச்சர்கள் கொடி யசைத்து தொடங்கி வைத்தனர்.  

   நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகே யன், மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.