புதுக்கேட்டை, மே 3- புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தில் பள்ளிக்கு செல்ல பாதை இல்லாததால் மாணவன் குடும்பத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் சாலை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிரா மத்தைச் சேர்ந்த செல்வம் மகன் இனியவன் (8). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கிறான். மாண வர் வீடு அங்குள்ள அன்னதானக் காவேரி கால்வாய் கரைக்கு அருகில் உள்ளது. தற்பொ ழுது கரை சீரமைக்கப்பட்ட நிலையில் கால்வாய்க்குள் இறங்கி ஏறி பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில், கடந்த மாதம் பள்ளிக்கு விடுப்பு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தான். அவனது பெற்றோரும் சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தனர். எனினும் சாலை வசதி கிடைக்காத நிலையில், திங்கள்கிழமை காலை மாணவன் இனியவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேந்தன்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். நீண்ட நேரமாகியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், அவ்வழி யாக வந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் காரை நிறுத்தி அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். கால்வாய் சீரமைக்கப்பட்டதால் வீட்டிற்கு செல்ல பாதை இல்லை. அதனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. விவசாய விளை பொருட்களை வெளியில் கொண்டு வர முடிய வில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத் தும் பயனில்லை என்றனர். உடனே அருகில் நின்ற வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து அரசு பொது நிலமாக இருந்தால் உடனே பாதை அமைத்து கொடுக்க உத்தரவிட்டார். ஆலங்குடி தாசில் தார் செந்தில்நாயகி, அன்னதானக் காவேரி அளவீடு செய்யப்பட உள்ளது. அளவீடு செய்த பிறகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து மாணவன் குடும்பத்தினர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.