districts

வாக்குப் பதிவு நாளில் 1,397 காவலர்கள் பணியில் இருப்பர்

தஞ்சாவூர், ஏப்.3- மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு  பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலு வலருமான ஏ.பி.மகாபாரதி  தலைமை யில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர், மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி தெரிவித்ததாவது: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் சீர்காழி சட்டமன்றத் தொகுதி யில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11  மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடு துறை சட்டமன்றத் தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண்  வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்த வர்களும் உள்ளனர். பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37, 454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண்  வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலினத்த வர்களும் உள்ளனர். கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி யில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும், 15  மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் 1,27,410 ஆண்  வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக் காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர் களும் என மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர். சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் 288 வாக்குச்சாவடிகளும், மயிலாடு துறை சட்டமன்றத் தொகுதியில் 266  வாக்குச்சாவடிகளும், பூம்புகார் சட்ட மன்றத் தொகுதியில் 306 வாக்குச்சாவடி களும், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 293 வாக்குச்சாவடிகளும், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளும், பாபநாசம் சட்ட மன்றத் தொகுதியில் 301 வாக்குச்சாவடி களும் என மொத்தம் 1743 வாக்குச் சாவடிகள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்றமான வாக்குச்சாவடிகளும், தஞ்சா வூர் மாவட்டத்தில் 39 பதற்றமான வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 89 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறி யப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. ஏப்.19 வாக்குப் பதிவு தினத்தன்று மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் தொடர்பாகவும், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப் பட்டது.  அதன்படி, திருவிடைமருதூர், கும்ப கோணம், பாபநாசம் ஆகிய 3 சட்ட மன்றத் தொகுதிகளில் வாக்குப் பதிவு தினத்தன்று 19 காவல் ஆய்வாளர்களும், 156 உதவி காவல் ஆய்வாளர்களும், 701  காவலர்களும், 417 ஊர் காவல்படை காவ லர்கள் மற்றும் இதர முன்னாள் இராணுவ வீரர்களும், 104 மத்திய காவல் படை காவ லர்களும் என மொத்தம் 1,397 பேர் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சி யர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி  வாக்குச்சாவடி மையத்தையும், திருவிடை மருதூர் வட்டம் திருபுவனம் அரசு மேல் நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை யும் நேரில் பார்வையிட்டார்.