திருவாரூர், ஏப்.28-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
கூட்டத்தில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சிகளில் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்பு திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் இதர தலைப்புகளில் விவா திக்கப்பட உள்ளது.
எனவே, கூட்டத்தில் அனைத்துத் தரப்பு பொது மக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக் களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சி யில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.