districts

திருச்சி முக்கிய செய்திகள்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்  பேருந்துகளில் இலவசப்பயணம் செய்ய அனுமதி

தஞ்சாவூர், செப்.4-  தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1,330  திருக்குறளையும் முற்றோதல் செய்யும் மாணவர் களுக்குப் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. 2022-2023 ஆம் நிதியாண்டிலிருந்து இப்பரி சுத்தொகை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,330 திருக்குற ளையும் முற்றோதல் செய்த மாணவர்கள் பத்து பேருக்கு  ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையையும், முதலமைச்சர்  கையெழுத்திட்ட சான்றிதழ் மற்றும் அரசாணையையும், திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாக ராஜன் வழங்கினார்.  மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அகவை  முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகைப் பெற்றுவரும் 12 பேருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணச்சலுகை ஆணையையும் வழங்கினார்.  இதைத் தொடர்ந்து, வடஅமெரிக்காவில் உள்ள உல கத் தமிழ் வளர்ச்சி மன்றம், சென்னை உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் மற்றும் தஞ்சாவூர் திருக்குறள் முற்றோதல் பயிற்றகம் ஆகியவை இணைந்து, பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச திருக்குறள் நூல்கள் வழங்கும் திட்டத்தின் தொடக்கமாக முதலில் 27 பள்ளி களுக்கு நூல்களை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கான தமிழ் கையெழுத்துப் போட்டியில் வெற்றிபெற்ற ஆறு மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜ.சபீர்பானு, தஞ்சாவூர் திருக்குறள் முற்றோதல் மண்ட லப் பயிற்சியாளர் திருக்குறள் தூயர் அ.கோபிசிங் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் ஆட்சியரிடம்  குவிந்த மனுக்கள்

அரியலூர், செப்.4- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த  320 மனுக்களை ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா பெற்றுக்கொண்டார் தொடர்ந்து அவர், கடந்த 2019-ஆம் ஆண்டில், ரூ.13.01 லட்சம் படைவீரர் கொடிநாள் வசூல் செய்த அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், 2020-ஆம்  ஆண்டில் ரூ.3.86 லட்சம் படை வீரர் கொடி நாள் வசூல்  செய்த மகளிர்த் திட்ட உதவி அலுவலர் ஆர்.ரேவதி ஆகி யோருக்கு சென்னையில் உள்ள முன்னாள் படைவீரர் நல  இயக்ககம் மூலம் வழங்கப்படும் வெள்ளிப் பதக்கம் மற்றும் அரசு முதன்மை தலைமை செயலரின் பாராட்டுச்  சான்றிதழ்களை வழங்கினார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராம லிங்கம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சாலியமங்கலம் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த  கோரிக்கை

பாபநாசம், செப்.4- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள சாலியமங்கலம் கீழத்தெருவில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி உள்ளது. இதில், களஞ்சேரி, சாலிய மங்கலம், பச்சக்கோட்டை, பள்ளியூர், திருபுவனம் உள் ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 150- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்பது  ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.  இந்தப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்ற  வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இது குறித்து சரவணன் என்பவர் கூறுகையில், “இந்தப்  பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லை. கிரா மப்புற குழந்தைகளின் கருதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தவேண்டு”மென்றார்.

தேவனூரில் பெண் தற்கொலை

அரியலூர், செப்.4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமம் கரைமேடு தெரு பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த  ஆறு மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். இவருக்கு நதியா (30) என்ற மனைவி யும், நித்திஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.  நதியா கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று நதியா தனது வீட்டில் உள்ள மின்விசிறி யில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயங் கொண்டம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். நதியாவின் மகன் நித்திஷிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், “சம்பத்தன்று இரவு இரண்டு நபர்கள்  தனது தாயுடன் பேசியதாகக் கூறியுள்ளார். காவல்துறை யினர் அந்த இரண்டு நபர்களிடம் விசாரித்து வருகின்ற னர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் உள்ள நதியாவின் உடலை வாங்க மறுத்து  அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை யிட்டனர். நதியாவின் இறப்பை கொலை வழக்காக;ப பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் அது வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி  உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

தஞ்சாவூரில் செப்.7 இல்  16 இடங்களில் மறியல்

தஞ்சாவூர், செப்.4 -  செப்டம்பர் 7- ஆம் தேதி, மோடி அரசைக் கண்டித்து  தஞ்சாவூர் மாவட்டத்தில், 16 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மறியலில் நான்காயிரம் பேர் பங்கேற்கின்றனர் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தெரிவித்துள்ளார்.  ரயில் மறியல்... தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் ஒன்றியம் சார்பில் தஞ்சாவூரில் ரயில் மறியல் நடைபெறுகிறது. இதில் மாநிலச்செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் பங்கேற்கின்றனர். கும்பகோணம் மாநகர், குடந்தை ஒன்றியம் சார்பில், கும்பகோணத்தில் நடைபெறும் ரயில்  மறியலில் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் பங்கேற்கிறார். ஆலக்குடி ரயில் மறியலில் ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன்,  பூதலூரில் நடைபெறும் ரயில் மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்கின்றனர். ஒன்றிய அரசு அலுவலகங்கள்... திருக்காட்டுப்பள்ளி- மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ஜீவக்குமார், திருவையாறு-மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, அம்மாபேட்டை- மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், பாபநாசம்- ஒன்றியச் செயலாளர் வி.முரளிதரன்.  திருவிடைமருதூர் (தெற்கு)- மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. ஜெயபால், திருவிடைமருதூர் (வடக்கு)-  மாவட்டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, திருப்ப னந்தாள்- மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே அருள ரசன்.  ஒரத்தநாடு- மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், திருவோணம்- மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் பட்டுக்கோட்டை- மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், மதுக்கூர்- மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் மறியலுக்கு தலைமையேற்கின்றனர் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் இடைக்குழுக்கள் சார்பில் பேராவூரணி ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் தலைமையில் மறியல் நடைபெறுகிறது.

வேளாண் கருவிகள் வழங்கல்

பாபநாசம், செப்.4 வேளாண்மை பொறியியல் துறை மூலம், வேளாண்  இயந்திர மயமாக்கல் திட்டம், குறுவை சிறப்பு தொகுப்பு  திட்டத்தின் கீழ் பவர் டில்லர் வழங்கும் நிகழ்வு நடந்தது.  பாபநாசத்தில் நடைபெற்ற நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பவர் டில்லர்களை பய னாளிகளுக்கு வழங்கினார். நிகழ்வில் அம்மா பேட்டை  ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி,  பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, ஒன்றியக் கவுன்சிலர்கள் ஹாஜா மைதீன், விஜயன், பெருமாள் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் உட்பட  பலர் பங்கேற்றனர்.

செப்.7-இல் பெரம்பலூர், பாடலூர், வேப்பூர், வேப்பந்தட்டையில் மறியல்

பெரம்பலூர், செப்.5- ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்  கைகளைக் கண்டித்து  பெரம்பலூர் மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்ப லூர், வேப்பந்தட்டை, வேப்பூர், பாடாலூர் ஆகிய  இடங்களில் செப்.7-ஆம் தேதி மறியல் நடை பெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் திங்களன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி மாவட்டச் செய லாளர் ரமேஷ், ஏ.கே.ராஜேந்திரன் (வி.ச.), எஸ். அகஸ்டின் (சிஐடியு), ஏ.கலையரசி (விதொச),  சரவணன் (வாலிபர் சங்கம்), பச்சையப்பன் (மாணவர் சங்கம்) ஆர்.கோகுலகிருஷ்ணன், எம்.கருணாநிதி (தீ.ஒ.மு), இரா.ராஜகுமாரன், எம்.கருணாநிதி, ரெங்கராஜ், வரதராஜன், பி.கிருஷ்ணசாமி குணசேகரன்,  மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் ராஜ சேகர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தலைவர்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையில் வேப்பந்தட்டையில் கடைவீதி மற்றும் பல்வேறு இடங்களில்  பொது  மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரச்சா ரத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பி னர் சக்திவேல், வட்டச் செயலர் கோகுல கிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் தின விழாவையொட்டி  கோ-ஆப் டெக்சில்  30 விழுக்காடு தள்ளுபடி

தஞ்சாவூர், செப்.4-  ஆசிரியர் தின விழாவையொட்டி, கோ ஆப்டெக்சில் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை 30 விழுக்காடு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது என்றார்’ அதன் மண்டல மேலாளர் ப.அம்சவேணி. இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- கோ-ஆப் டெக்சில் ஆசிரியர் தினத்தையொட்டி 30 விழுக்காடு, சிறப்புத் தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு சேலைகள், கோயம்புத்தூர் கோரா காட்டன் சேலைகள், கூரைநாடு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, கைலி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட், ஏற்றுமதி ரகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கனவு நனவு திட்டதில் 2022 - 2023 ஆம் ஆண்டில் மூன்றாயிரம் வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12-ஆவது மாத சந்தாத் தொகையை கோ-ஆப்டெக்ஸ் போனஸாக வழங்கி மொத்த முதிர்வு தொகைக்கு 30 விழுக்காடு அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது என்கிறார்.