விலைவாசி வியர்வை குறைக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளர் மெர்ஸி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கலைச்செல்வி உரையாற்றினார்.