districts

img

தேசிங்குராஜபுரத்தில் மாபெரும் ரத்த தான முகாம்

திருத்துறைப்பூண்டி, ஆக.27 - திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி வட்டம் தேசிங்குராஜபுரம் கிராமத்தில் மாபெரும் ரத்த தான முகாம் தேசிங்குராஜபுரம் ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்தியது. அவர்களுடன் இணைந்து  கோகுலம் பேரவை தேசிங்குராஜபுரம் மற்றும் தீவம்பாள்பட்டினம், பிகேடி நர்சிங் ஹோம்-திருத்துறைப்பூண்டி, ஸ்ரீ  வெங்கடேஸ்வரா இரத்த வங்கி-திரு வாரூர், தமிழ்நாடு குருதிக் கொடை யாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் நல சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொ சைட்டி-திருத்துறைப்பூண்டி கிளை, நல்லோர் வட்டம், சர்வாலயா அருட்பணி  அறப்பணி குழு, அன்பு பாரதம் இலவச அரசு போட்டித் தேர்வு பயிற்சி  மையம், ஒன் நேசன் சைல்டு டிரஸ்ட்-ஸ்ரீலங்கா ஆகியோர் நடத்தினர். முகாமிற்கு ராய் டிரஸ்ட் இன்டர் நேஷனல் நிறுவனத் தலைவர் முனை வர் துரை ராயப்பன் தலைமை வகித் தார். கோகுலம் பேரவை ஒருங்கி ணைப்பாளர் முருகவேல் ரவி வர வேற்றார். திருவாரூர் ஸ்ரீவெங்க டேஸ்வரா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் லட்சுமி நாராயணன் முகாமை தொடக்கி வைத்தார். ரத்த வங்கி ஊழியர்கள் குழு 35-க்கும்  மேற்பட்ட அரிய வகை ரத்தங்களை சேகரித்தன. திருவாரூர் ஊரக வளர்ச்சித்  துறையில் பணிபுரியும் கோவி.செந்தில்  நன்றி கூறினார்.